ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழ் சினிமாவில் வாலிக்கு பிறகு அதிகமான பாடல்களை எழுதி வந்தவர் வைரமுத்து. இளையராஜாவின் கூட்டணியில் ஒரு காலத்தில் ஹிட் பாடல்களாக எழுதி வந்தவர், அவருடன் ஏற்பட்ட விரிசலையடுத்து ஏ.ஆர்.ரகுமானுககு பாடல்கள் எழுதி வந்தார். அந்த நேரங்களில் முன்னணி கம்பெனிகளுக்கு மட்டுமே பாடல்கள் எழுதினார்.
அதோடு, கிழக்கு சீமையிலே படம் வந்த நேரததில் லட்சக்கணக்கில் தனது சம்பளத்தையும் உயர்த்தியவர். அதனால் சிறிய பட்ஜெட் கம்பெனிகள் வைரமுத்துவை நெருங்கவே பயந்து ஒதுங்கி நின்றன. ஆனால் இப்போது காலம்மாறி விட்டது. புதுமுக பாடலாசிரியர்களின் படையெடுப்பு வைரமுத்து போன்ற முன்னணி பாடலாசிரியர்களுக்கு பெரிய தேக்கததை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிசியாக பாடல் எழுதி வந்த வைரமுத்து அவ்வப்போது ஒரு படத்துக்கு பாடல் எழுதும் நிலையில் இருக்கிறார்.
அதனால், முன்பு மாதிரி முன்னணி கம்பெனிக்குத்தான் பாட்டெழுதுவேன் என்பதை விட்டு விட்டு சிறிய கம்பெனிகளுக்கும் இறங்கி வந்து பாட்டெழுதுகிறார். அதோடு, இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் இயக்கிய கேரள நாட்டிளம் பெண்களுடனே படத்துக்கு பாதி சம்பளம் மட்டுமே வாங்கி பாட்டெழுதிய வைரமுத்து, இப்போது சில புதிய கம்பெனிகளுக்கும் பாதி சம்பளம் வாங்கிக்கொண்டே பாட்டெழுதுகிறார். இப்படி வைரமுத்து, ஆடி தள்ளுபடி போன்று 50 சதவிகிதம் தள்ளுபடி செய்வதால், சில பட்ஜெட் படாதிபதிகள் தற்போது அவரை நோக்கி படையடுக்கத் தொடங்கியுள்ளனர்.