ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இதுவரை டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மீதுதான் நடிகைகள் பாலியல் புகார் அளித்து வந்தனர். ஆனால், இப்போது ஒரு நடிகை புரொடன்ஷன் மேனேஜர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். மலையாளத்தில் தற்போது ஜெயராம் நடித்து வரும் புதிய படத்தில் ஜோதி கிருஷ்ணா என்ற நடிகை நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இவர், தான் நடிக்க வேண்டிய காட்சியை முடித்ததும் ஓய்விற்காக தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு சென்றாராம். அப்போது அவரை பின்தொடர்ந்த தயாரிப்பு நிர்வாகி ஷாஜி என்பவர், ஜோதியிடம் சில்மிஷம் செய்யத் தொடங்கி விட்டாராம். இதையடுத்து, ஹோட்டல் அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே ஓடிவந்த ஜோதி, நடந்ததை ஜெயராம் உள்ளிட்டோரிடம் கூறி அழுதிருக்கிறார்.
இதையடுத்து, மலையாள நடிகர் சங்கத்தில் ஜோதி புகார் அளித்திருக்கிறார். இதுகுறித்து யூனிட்டில் இருந்த மற்ற கலைஞர்களும் ஜோதிக்கு ஆதரவாக சாட்சி கூறியிருக்கிறார்கள். அதனால், மலையாள நடிகர், தயாரிப்பாளர், தொழிலாளர் நல கூட்டமைப்புகள் இணைந்து, தயாரிப்பு நிர்வாகி ஷாஜிக்கு 6 மாதம் எந்த படத்திலும் பணியாற்ற முடியாத தற்காலிக தடை விதித்துள்ளதாம்.