ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டைரக்டர் சரண் இயக்கத்தில் அஜீத் குமார் நடித்த படம் காதல் மன்னன். இந்த படத்தில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மெஸ் நடத்தும் கேரக்டரில் நடித்திருந்தார். இதில்தான் அஜீத்துக்கு ஜோடியாக அறிமுகமானார் மானு. சிங்கப்பூர் தமிழ்ப்பெண்ணான இவர் அந்த படத்தின் வெற்றியினால் கோலிவுட்டில் பெரிய நடிகையாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பின்னர் தேடிவந்த பட வாய்ப்புகளைகூட தவிர்த்துவிட்டு சிங்கப்பூர் சென்ற மானு, அங்குள்ள தொலைக்காட்சிகளில் முகம் காட்டி வந்தார். அந்த வகையில், கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப்பிறகு மீண்டும் தற்போது டைரக்டர் ஜெயம் ராஜா நடித்துள்ள என்ன சத்தம் இந்த நேரம் என்ற படத்தில் நடித்துள்ளார் மானு.
இந்த படத்தின் ஆடியோ விழாவுக்காக சென்னை வந்திருந்த மானு, 15 வருடங்கள் ஆனபோதும் அதே பழைய இளைமையான மானுவாகவே காட்சி கொடுத்தார். மேலும், இந்த படத்தில் நான்கு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. அதனால் இது மாதிரி என் மனதை தொடும் வேடங்கள் கிடைத்தால் அவ்வப்போது சினிமாவில் நடிப்பேன் என்றார் மானு.