ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பல்வேறு புதுமையான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வரும் பாலிமர் தொலைக்காட்சி 'அமுதசுரபி' என்ற புதிய தொடரை ஒளிபரப்புகிறது.இதில் சங்கீதா கதாநாயகியாக நடிக்கிறார். 'மர்மதேசம்', 'சிதம்பர ரகசியம்' போன்ற பிரபல தொடர்களை இயக்கியவரும் ஷங்கர் தயாரிப்பில் 'ஆனந்தபுரத்து வீடு' படத்தை இயக்கிக்கொண்டிருப்பவருமான நாகா இந்தத் தொடரை இயக்குகிறார்.'அமுதசுரபி' பற்றி கேட்டபோது... '' அமுதசுரபி என்பது மணிமேகலை கையில் இருந்த அட்சயபாத்திரம் என்பது எல்லோரும் அறிந்த செய்தி. மணிமேகலையிடம் இருந்த அந்த அட்சயபாத்திரம் இப்போது எங்கே இருக்கிறது? இந்தக் காலத்தில் இப்படி ஒரு பாத்திரம் இருக்குமா? என்பதன் தேடல்தான் இந்தத் தொடர். இதை வரலாற்றுப் பின்னணியோடு மாயாஜாலம், அமானுஷ்யம் கலந்து விறுவிறுப்பாகக் கூறுகிறோம். மேலும் தொல்லியல்துறை, கட்டடக்கலை போன்றவற்றைப் பற்றிய பல அரிய குறிப்புகளும் இந்தத் தொடரில் இடம்பெறுகின்றன. மணிமேகலையாக சங்கீதா நடிக்கிறார்'' என்றார் இயக்குநர் நாகா. இந்தப் புதிய தொடர், ஏப்ரல் மூன்றாம் வாரம் முதல் பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.