விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
சின்னத்திரையின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் திருச்செல்வம். 7 ஆண்டுகள் தொடர்ந்து ஒளிபரப்பான கோலங்கள், மாதவி, பொக்கிஷம், உள்பட பல தொடர்களை இயக்கிய திருச்செல்வம் தற்போது சித்திரம் பேசுதடி தொடரை இயக்கி வருகிறார். திருச்செல்வம் விரையில் ஒரு திரைப்படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இதற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: சவுண்ட் என்ஜினீயரிங் படித்து விட்டு பிரசாத் ஸ்டூடியோவில் வேலை பார்த்தேன். டாக்குமெண்டரி இயக்கும் ஆர்வம் வந்தது. நிறைய டாக்குமெண்டரிகள் இயக்கினேன். அந்த அனுபவத்தின் அடிப்படையில் சின்னத்திரை சீரியல் இயக்க வந்துவிட்டேன். போதும் போதும் என்கிற அளவுக்கு சீரியல்களை இயக்கி விட்டேன். எடுத்த கதையை எந்த மாற்றமும் செய்யாமல் கடைசி எபிசோட் வரைக்கும் கொண்டு சென்றிருக்கிறேன். அடுத்த கட்டம் சினிமாதானே. அதற்கான முயற்சியில் இருக்கிறேன். விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்குகிறேன். தமிழில் மிகச் சிறந்த நாவல்களை சின்னத்திரை சீரியல்களாக எடுக்கலாம் என்பது என் கருத்து. அதற்கான முயற்சியில் இறங்குவேன். என்கிறார் திருச்செல்வம்.