மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
இதுவரை கமல் மட்டுமே தான் நடிக்கும் படங்களில் புதிய டெக்னாலஜிக்களை அறிமுகம் செய்து வந்தார். அந்த வகையில், தான் தயாரித்து, இயக்கி நடித்த விஸ்வரூபம் படத்தில் ஆரோ சவுண்ட் சிஸ்டத்தின் அனுபவத்தை இந்திய ரசிகர்களுக்கு கொடுத்தார். அதேப்போல் அப்படம் திரைக்கு வரும் அதே நாளில் சாட்டிலைட்களிலும் வெளியிட்டு புதிய சாதனை நிகழ்த்தயிருந்தார். ஆனால், தியேட்டர்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முயற்சியை கைவிட்டார். இருப்பினும் எதிர்கால சினிமா மூலம் கமலின் ஆசை நிறைவேற அதிக வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில், கோச்சடையான் என்ற அனிமேஷன் படம் மூலம் மோசன் கேப்சர் தொழில் நுட்பத்தை முதன்முறையாக இந்தியாவுக்கு எடுத்து வந்தார் ரஜினி. அதையடுத்து இப்போது தான் நேரடியாக நடித்து வரும் லிங்கா படத்திலும் பிரமாண்டங்களை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு வரும் ரஜினி, அப்படத்தின் 1940களில நடக்கும் கதைக்களத்துக்காக சில ஹாலிவுட் நடிகர்-நடிகைகளை இறக்குமதி செய்து வருகிறார்.
அதேவேளையில், பாண்டம் ப்ளக்ஸ் 4 கே ஸ்பீடு என்ற அதிநவீன கேமரா மூலம் சில முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை படமாக்கி வருகின்றனர். குறிப்பாக ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் லீ விட்டேகரின் சண்டை பயிற்சியில் ரஜினி நடிக்கும் காட்சிகளை இந்த அதிநவீன கேமராவை ஸ்டீரியோ விஷன் மூலம் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு படமாக்கி வருகிறார். இந்த கேமரா இந்தியாவில் இதுவரை தயாரான எந்த படத்திற்கும் பயன்படுத்தப்படவில்லையாம்.