ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தனது தம்பி ஜெயம்ரவியை நாயகனாகக்கொண்டு ஜெயம் படத்தை முதலில் இயக்கிய ஜெயம் ராஜா, அதையடுத்து எம்.குமரன் சன்ஆப் மகாலட்சுமி, சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி ஆகிய படங்களை இயக்கியவர், தற்போது ஆறாவதாக தனி ஒருவன் என்ற படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.
அப்படி அவர்கள் இருவரும் இணைந்த அனைத்து படங்களுமே ஹிட்தான். ஆனால், பின்னர் விஜய்யை வைத்து வேலாயுதம் படத்தை இயக்குவதற்காக ராஜா ட்ராக்கே மாற்றியபோது, ஜெயம்ரவியும் மற்ற இயக்குனர்களிடம் கதை கேட்டு தானும் ட்ராக்கை மாற்றிக்கொண்டார். அதையடுத்து, மீண்டும் தம்பிக்கான ஸ்கிரிப்டுடன் டைரக்டர் ராஜா தயாரானபோது அவர் பிசியாக இருந்தார்.
அதனால், இரண்டரை ஆண்டுகளாக வெயிட் பண்ணிக்கொண்டிருந்தவர், என்ன சத்தம் இந்த நேரம் என்ற படத்திலும் நடித்தார். இந்தநிலையில், கைவசமிருந்த படங்களை முடித்து விட்ட ஜெயம்ரவி, மீண்டும் கால்சீட் கொடுத்ததை அடுத்து, 'தனி ஒருவன்' என்ற அந்த படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார் ராஜா.
இதுவரை தனது படங்களில் காதல் மற்றும் காமெடி, செண்டிமென்டுக்கு முன்னுரிமை கொடுத்த ராஜா, இந்த படத்தில் விஜய்யை இயக்கிய வேலாயுதம் படத்தைப்போலவே ஆக்சனை தூக்கலாக வைத்துள்ளாராம். ஜெயம்ரவி மட்டுமின்றி, நயன்தாராவும் ஆக்ஷன் வேடத்தில் நடிப்பதால், தனி ஒருவன் அதிரடி ஆக்சன் படமாக வளர்ந்து கொண்டிருக்கிறதாம்.