ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆர்யாவின் தம்பி சத்யா நடிக்கும் படம் அமரகாவியம். விஜய் ஆண்டனி நடித்த நான் படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கி உள்ளார். இந்தப் படத்துக்கு பிறகு இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஆர்யாவுக்கு போட்டி சத்யாதான் என்கிறார். அவர் மேலும் கூறியதாவது: நான் படத்துக்கு பிறகு வேறொரு கம்பெனிக்காக படம் பண்ண முடிவு செய்திருந்தேன். ஆர்யா என் வீட்டுக்கு பக்கத்து வீடுதான். சத்யா அடிக்கடி என் வீட்டுக்கு வருவார். திடீரென்று ஒரு நாள் உங்க டைரக்ஷன்ல நான் நடிக்கணும், கதை சொல்லுங்க என்றார். அமரகாவியம் கதையை அவர்கிட்டேயும் ஆர்யாகிட்டேயும் சொன்னேன். இருவரும் ஓகே சொல்ல ஷூட்டிங் போய்விட்டோம். திட்டமிட்ட பட்ஜெட்டைவிட அதிகமாக செலவானபோதும் ஆர்யா ஒரு வாத்தை ஏன் என்று கேட்கவில்லை.
இது 1988-89ம் ஆண்டுகளில் நடக்கும் காதல் கதை. எல்லோருக்குமே முதல் காதல் ரொம்பவே ஸ்பெஷலாக இருக்கும். அதை நினைவு படுத்துகிற மாதிரி இந்தப் படம் இருக்கும். சத்யாவுக்கு ஒரு நல்ல இடத்தை இந்தப் படம் பெற்றுத் தரும். இன்னும் இரண்டு வருடங்களில் ஆர்யாவுக்கு போட்டியாக சத்யா வருவார் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். என்கிறார் ஜீவா.