ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை சோனாக்ஷி சின்ஹா, ஷாகித் கபூர் நெருக்கம் பற்றித்தான் பாலிவுட்டில் தற்போது ஒரே பரபரப்பாக உள்ளது. இருவருக்குள்ளும் காதல் என பாலிவுட் மீடியாக்கள் வரிந்து கட்டிக் கொண்டு எழுதி வருகின்றன. வழக்கம் போலவே அவர்களிருவரும் அதை மறுத்து வருகிறார்கள்.
பிரபல இந்தி நடிகரும், எம்.பி.யுமான சத்ருக்கன் சின்ஹாவின் மகளான சோனாக்ஷி சின்ஹா, ரஜினிகாந்த் ஜோடியாக 'லிங்கா' படத்தில் நடிப்பதன் மூலமும் தென்னிந்தியத் திரையுலகிலும் புகழைப் பெற்றுவிட்டார். அவர் சல்மான் கானுடன் ஜோடி சேர்ந்து நடித்து அறிமுகமான 'தபாங்' படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்ததால் சட்டென முன்னணி நடிகையாக மாறிவிட்டார்.
2012ல் மட்டும் நான்கு படங்களிலும், 2013ல் 6 படங்களிலும் நடித்துவிட்டார். தற்போது நான்கு படங்களில் நடித்து வருகிறார். பிரபு தேவா இயக்கி வெளிவந்த 'ராம்போ ராஜ்குமார்' படத்தில் ஷாகித் கபூருடன் ஜோடியாக நடிக்கும் போதுதான் இருவரும் மிகவும் நெருக்கமாகிவிட்டார்கள் என்கிறது பாலிவுட் வட்டாரங்கள்.
சில நாட்களுக்கு முன் சோனாக்ஷி சின்ஹா அவருடைய பிறந்த நாளுக்காக பார்ட்டி வைத்த போது, பார்ட்டி முடிந்ததும், ஷாகித் கபூர், சோனாக்ஷியை அழைத்துக் கொண்டு எங்கோ பறந்து விட்டாராம். பார்ட்டிக்கு மிகவும் தாமதமாக வந்த ஷாகித்தைப் பார்த்ததும், சோனாக்ஷி ரொம்பவே குஷியாக காணப்பட்டாராம். அவரைச் சந்தித்து வெகுநாட்களாகிவிட்டதே இதற்குக் காரணம் என்கிறார்கள் சோனாக்ஷியின் நண்பர்கள்.
ஷாகித், சோனாக்ஷி மீது தீவிரமாக அன்பு செலுத்தி வருகிறாராம். இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வது வழக்கம்தானாம். ஆனால், சோனாக்ஷி நடித்து விரைவில் வெளிவர இருக்கும் படத்திற்காக அவர் மிகவும் பிஸியாக இருப்பதால் முன்பைப் போல இருவராலும் அடிக்கடி சந்திக்க முடியாமல் போயிருக்கிறது. சமீபத்தில், பிறந்த நாளன்று சந்திக்கும் வாய்ப்பு ஏற்படவே இருவரும் வெளியில் கிளம்பிச் சென்று ஊரைச் சுற்றியிருக்கிறார்கள்.