விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
எம்.ஜி.ஆர்., சிவாஜி காலம் வரை தமிழ் சினிமாவில் வாழ்வியல் தத்துவம் மற்றும் தன்னம்பிக்கை ஊட்டும் பாடல்கள் அதிகமாக இடம்பெற்று வந்தன. ஆனால், காலப்போக்கில் சினிமாவில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இப்போது காதல் பாடல்கள், குத்துப்பாடல்கள், டாஸ்மாக் பாடல்கள் என்கிற நிலை உருவாகி விட்டது.
இதுபற்றி பாடலாசிரியர் அண்ணாமலை கூறுகையில், மாற்றம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான். மேலும், இன்றைக்கும் நல்ல கருத்துக்களை சொல்லும் பாடல்கள், சோர்ந்து போகும் மனிதர்களுக்கு உற்சாக டானிக்காக அமையும் தன்னம்பிக்கை பாடல்களும் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கின்றன.
என்னைக்கேட்டால், 'ஹரிதாஸ்' என்ற படத்தில், ''அன்னையின் மடியில் கருவாக பிறந்தாயே, அப்போதே மனிதாநீ ஜெயித்தாயே...'' என்றொரு தன்னம்பிக்கை பாடலை எழுதியிருக்கிறேன். அதேபோல் 'நான்' என்ற படத்தில், ''உலகினில் மிக உயரம் மனிதனின் சிறு இதயம், விரல் நீட்டும் திசையில் ஓடாது நதிகள்...'' என்றொரு தன்னம்பிக்கை பாடலை எழுதியிருக்கிறேன்.
அதையடுத்து, இப்போது 'சலீம்' என்ற படத்துக்காக, ''உலகம் உன்னை கையை கழுவினாலும், நடுத்தெருவில் உன்னை நிறுத்தினாலும், முடியும் வரை முட்டி மோதி பாரு, ஒரு பொழுதும் மனம் உடைந்திடாதே...'' - என்றொரு பாடலை எழுதியிருக்கிறேன்.
ஆக, அவ்வப்போது இதுபோன்ற தன்னம்பிக்கையை சொல்லும் பாடல்கள் எழுதும் வாய்ப்புகள் கிடைத்து கொண்டுதான் இருக்கிறது. இந்த மூன்று பாடல்களுமே, பெரும் துன்பத்தில் கலங்கி நிற்பவர்கள், தோல்வியினால் விரக்தி அடைந்தவர்கள் என அனைவருக்குமே இந்த பாடலைக்கேட்டால், ஒரு உத்வேகம் பிறக்கும். நம்மாலும் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை துளிர்விடும். இந்த உலகமா நாமளான்னு ரெண்டுல ஒன்னு பார்க்கனும் என்கிற வேகத்தை ஏற்படுத்தக்கூடிய பாடல்கள் இவை என்று சொல்லும் பாடலாசிரியர் அண்ணாமலை, நான் எழுதியதில் தன்னம்பிக்கையை ஊட்டும் இந்த முத்தான மூன்று பாடல்களும் எனக்கு அதிகமாக பிடித்தவை என்கிறார்.