ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவுக்கு நவீன நாடகத் துறையில் இருந்து வந்தவர் கலைராணி. சவுகார் ஜானகிக்கு பிறகு அழுவாச்சி நடிகை என்று பெயர் பெற்றார். கலைராணி வரும் காட்சிகளில் எல்லாம் கீச்சு குரலில் அழுது கொண்டே இருப்பார். அப்படிப்பட்ட கலைராணி இப்போது காமெடி ராணியாகிவிட்டார்.
சேட்டை படத்துக்கு பிறகு ஆர்.கண்ணன் இயக்கும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் கலைராணி சூரியுடன் காமெடி காட்சிகளில் நடித்துள்ளார். "அவர் வரும் காட்சிகளில் எல்லாம் சிரிப்பு சரவெடிதான் வெடிக்கும், முதன் முறையாக அவருக்குள் இருக்கும் நகைச்சுவை உணர்வை வெளிக்கொண்டு வந்திருக்கிறேன், மனோரமா, கோவை சரளாவுக்கு பிறகு நல்ல நகைச்சுவை நடிகையாக கலைராணி வருவார்" என்கிறார் இயக்குனர் ஆர்.கண்ணன்.
இத்தனை வருடங்களாக என்னை அழவைத்துதான் பார்த்தார்கள். முதன் முறையா என்னை சிரிக்க வைத்து பார்த்திருக்கிறார்கள். இயற்கையிலேயே நான் நகைச்சுவை உணர்வு உள்ளவள். சினிமாவில்கூட நகைச்சுவை காட்சிகளைத்தான் விரும்பி பார்ப்பேன். எனக்கும் ரசிகர்களை அழ வைத்து போரடித்து விட்டது. இனி சிரிக்க வைக்க முடிவு செய்திருக்கிறேன் என்கிறார் கலைராணி.