ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? |
ஒரு ஊர்ல ஒரு ஆயா வடை சுட்டுக்கிட்டு இருந்திச்சாம். அப்போ ஒரு காக்கா ஆயாவுக்கு தெரியாம வடை திருடி வாயில கவ்வியபடி மரத்துமேல இருந்திச்சாம். அப்போது அங்கு வந்த நரி. காக்காவிடம் இருந்து வடையை பறிக்க நினைச்சு "காக்கா...காக்கா... உன் குரல் இனிமையா இருக்க ஒரு பாட்டுப்பாடு"ன்னு சொல்லிச்சாம். காக்கா வாயை திறந்து "காக்கா... காக்கா..." கத்தவும் வாயில இருந்த வடை கீழே விழுந்துச்சாம். நரி வடைய தூக்கிகிட்டு ஓடிடுச்சாம்.
இது பேரன் பேத்திகளுக்கு காலம் காலமாக பாட்டிகள் சொல்லிவரும் கதை. ஆனால் தற்போது தயாராகி வரும் ஆயா வடை சுட்ட கதை என்ற படத்தின் கதை இதுதான்... மனிதர்களில் காக்கா மாதிரி புகழ்ச்சிக்கு மயங்கி ஏமாறுகிறவர்களும் உண்டு. ஆயா மாதிரி அப்பாவிகளும் உண்டு. நரி மாதிரி குறுக்கு புத்தி உள்ளவர்களும் உண்டு. இவர்களை சுற்றி நடக்கிற கதை.
ஒரு அடுக்குமாடி குடியிறுப்பில் விதவிதமான மனிதர்கள் வசிக்கிறார்கள். காலையில் வேலைக்கு செல்கிறவர்கள், மாலையில்தான் வீடு திரும்புகிறார்கள். காலையில் இரை தேடிச் சென்று விட்டு மாலையில் கூடு திரும்பும் காக்ககைளைப்போல. அந்த அப்பார்ட்மெண்டில் குடியிருப்பவள்தான் நாயகி. அப்பார்டமெண்டிற்கு பேப்பர் போடுகிறவன்தான் நாயகன். அந்த அப்பார்ட்மெண்டுக்கு கெட்ட நோக்கத்தோடு ஒரு குடும்பம் குடியேறுகிறது. அது நரியைப்போல ஏமாற்றி நாயகி என்கிற வடையை அபகரிக்கப் பார்க்கிறது. காக்காய் போன்ற அவள் குடும்பமும் நரியின் பேச்சை கேட்க ஆரம்பிக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஹீரோ அந்த நரியின் குடும்பத்திலிருந்து ஹீரோயினை எப்படி காப்பாற்றுகிறான் என்பதுதான் கதையாம்.
"மணிரத்னம் மகாபாரத்தை அடிப்படையாக வைத்து தளபதியையும், ராமாயணத்தை அடிப்படையா வைத்து ராவணன் படத்தையும் இயக்குன மாதிரி நான் ஆயா வடை சுட்ட கதையை வைத்து படம் இயக்க கூடாதா?" என்று கேட்கிறார் இயக்குனர் பணிந்திரா. புதுமுகங்கள் அபிடேஜ், சுபர்ணா நடிக்கிறார்கள்.