ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் 80களின் இறுதியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கியவர் அமலா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு உட்பல பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர். பின்னர் தெலுங்கிலும் அறிமுகமாகி அங்கும் முன்னணி நடிகையாக இருந்தார். தெலுங்கில் முன்னணி நடிகரான நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டு நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இந்த நட்சத்திரத் தம்பதியருக்கு அகில் என்ற ஒரே ஒரு மகன் இருக்கிறார். அகில் குழந்தையாக இருக்கும் போதே 'சுட்டிக் குழந்தை' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
வாலிப வயதை எட்டியுள்ள அகில் விரைவில் தெலுங்குத் திரையுலகில் நாயகனாக அறிமுகமாக உள்ளார். சமீபத்தில் வெளிவந்த 'மனம்' திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அகில் நடித்திருந்தார்.
கடந்த சில வருடங்களாகவே பல இயக்குனர்கள் அகிலை அவர்களது படங்களில் நாயகனாக நடிக்க வைக்க நாகார்ஜுனாவை அணுகினர். ஆனால், நாகார்ஜுனா இன்னும் கொஞ்சம் காலம் போகட்டும் என்று பதிலளித்திருந்தார். தற்போது, தேவா கட்டா என்ற இயக்குனர் நாகார்ஜுனாவை சந்தித்து ஒரு கதை சொல்லியிருப்பதாகவும், அந்த கதை அவருக்கு மிகவும் பிடித்து அகிலை நடிக்க வைக்க சம்மதித்துள்ளதாகவும் தெரிகிறது. இயக்குனர் தேவா தற்போது கதை விவாதத்தில் இருக்கிறார். அது முடிந்ததும் முழு கதையையும் சொல்லி ஓகே வாங்கிவிடுவார் என்கிறார்கள்.
ஆக, ஆந்திராவில் அடுத்து ஒரு வாரிசு அறிமுகமாகிறார்.