ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
யாரோ ஒரு மலையாள நடிகருடன் ஓடிச்சென்று திருமணம் செய்து கொண்ட ஒரு நடிகையை, கடந்த ஒரு வருடமாக என்னுடன் இணைத்து தமிழ் பத்திரிகைகளில் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இது என் மனதுக்கு ரொம்பவே வேதனையாக உள்ளது என்கிறார் ராட்டினம் பட நாயகன் லகுபரன். தினமலர் இணையதளத்துக்காக அவர் அளித்த பேட்டி இதோ...
* தற்போது என்னென்ன படங்களில் நடித்து வருகிறீர்கள்?
ராட்டினம் படத்தையடுத்து, ஒருவர் மீது இருவர் சாய்ந்து படத்தில் நடித்தேன். அதைத் தொடர்ந்து இப்போது ராட்டினம் இயக்குனர் கே.எஸ்.தங்கசாமி இயக்கியுள்ள எட்டுத்திக்கும் மதயானை படத்தில் ஒரு கேரக்டரில் நடித்துள்ளேன். 5 நிமிடம்தான் படத்தில் வருவேன். எனக்கு ஒரு பாடலும், சில காட்சிகளும் உள்ளது. ஆனால், என்னை மையமாக வைத்துதான் படத்தின் கதையே செல்லும். அதனால் சிறிய வேடம் என்றாலும் படம் முழுக்க வருவதுபோல் இருக்கும். இதையடுத்து, ஊசி பட்டாசு மற்றும் ஒரு பிரபல இயக்குநர் தயாரிக்கும் படத்திலும் நடிக்கிறேன். இதற்கிடையே ராட்டினம் படத்தையடுத்து நான் நடித்த அயலான் என்ற படம் மனம் மயங்குதே என்று பெயர் மாற்றப்பட்டு தற்போது ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.
* ராட்டினத்துககு பிறகு தொடர்ந்து ஹீரோவாக நடிக்கும்போது, எட்டுத்திக்கும் மதயானையில் கேரக்டர் ரோலில் நடித்திருப்பது உங்களது ஹீரோ இமேஜை பாதிக்காதா?
நான் சினிமாவில் ஹீரோவாகத்தான் நடிக்க வேண்டும் என்று வரவில்லை. நல்ல வித்தியாசமான கேரக்டர்களாக நடிக்கத்தான் வந்தேன். எதிர்பாராதவிதமாக முதல் படத்திலேயே ஹீரோவாகி விட்டேன். மேலும், நான் ஹீரோவாக நடிப்பதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது. அதனால் இப்போதைக்கு மாறுபட்ட கேரக்டரில் நடித்து எனது திறமையை வளர்த்துக்கொள்ளவே ஆசைப்படுகிறேன். எட்டுத்திக்கும் மதயானையில் நான் சிறிய வேடத்தில் நடித்ததும் அதுதான் காரணம். அதோடு, வில்லத்தனமான வேடங்கள் கிடைத்தாலும் கட்டாயம் நடிப்பேன். என்னைப்பொறுத்தவரை நான் நடிப்பில் பெரிய அளவில் ஸ்கோர் பண்ண வேண்டும் அது மட்டும்தான் இப்போதைக்கு எனது நோக்கமாக உள்ளது.
* ஊசி பட்டாசு படத்துக்காக நீங்கள் உடம்பை கருப்பாக மாற்றி வருவதாக கூறப்படுகிறதே?
உண்மைதான். அந்த படத்தில் காக்கா முருகன் என்றொரு வேடத்தில் நடிக்கிறேன். அது ஹீரோ வேடம் என்று சொல்ல முடியாது. அதுவும் படத்தில் ஒரு முக்கியமான ரோல். அதனால் அந்த கதாபாத்திரமாகவே மாற உடல் எடையை குறைத்தபடி, தினமும் மணிக்கணக்கில் மொட்டை மாடி வெயிலில் நின்றபடி உடம்பை கருப்பாக்கி வருகிறேன். கடந்த இரண்டு மாதமாக இது நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் என் உடம்பில் எதிர்பார்த்த கருப்பு வராததால்தான் படப்பிடிப்பைகூட ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்.
* அப்படியென்றால் கதாபாத்திரத்திற்காக உடலை வருத்தி நடிக்கவும் தயாராகி விட்டீர்கள் அப்படிதானே?
கண்டிப்பாக அப்படித்தான். காரணம், இன்றைக்கு ரசிகர்கள் நடிகர்களிடம் வித்தியாசமான நடிப்பை நிறையவே எதிர்பார்க்கிறார்கள். அதனால் நடிக்கிறவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது. அதிலும் இன்னும் சினிமாவில் ஒரு இடம் கிடைக்காத என்னைப்போன்ற நடிகர்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கிறது. அதனால்தான், கதைக்காகவும், கதாபாத்திரத்திற்காகவும் நூறு சதவிகிதம் என்னை மாற்றிக்கொண்டு வருகிறேன்.
* ராட்டினம், ஒருவர் மீது இருவர் சாய்ந்து படங்களில் உங்களுக்கு ஜோடியாக நடித்த ஸ்வாதியும், நீங்களும் ஓடிப்போய் கல்யாணம் செய்து கொண்டதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளதே. அது உண்மையா?
இதில் துளிகூட உண்மையில்லை. அந்த படங்களில் நடித்த பிறகு அவரை நான் சந்திக்கவே இல்லை. அதையடுத்து, தமிழிலும் படங்கள் இல்லாததால் அவர் மலையாள படங்களில் நடிக்கச்சென்று விட்டார். அதோடு, அவர் ஒரு சக நடிகை என்கிற முறையில்தான் அவரிடம் நான் பழகியிருக்கிறேன். எங்களுக்கிடையே காதல் கத்தரிக்காய் என்று எதுவும் வந்ததில்லை. ஆனால், இந்த இடத்தில் நான் ஒரு உண்மையை சொல்ல வேண்டும். ஸ்வாதி ஒரு மலையாள படத்தில் அஜய் என்றொரு நடிகருடன் நடித்து கொண்டிருந்தபோது அவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டதாகவும்,. அதையடுத்து, அவர்கள் பெங்களூருக்கு ஓடிச்சென்று திருமணம் செய்து கொண்டதாக ஒருமுறை ஸ்வாதியின் அம்மாவை நான் போனில் தொடர்பு கொண்டபோது அவர் சொல்லித்தான் எனக்கேத் தெரியும்.
* ஆனால் இதில் எப்படி உங்கள் பெயர் அடிபடுகிறது?
நான் அவருடன் இரண்டு படங்களில் நடித்திருப்பதால் நம்ம ஊர் பத்திரிகைகள் அதுபற்றி என்ன நடந்தது என்பதை முழுவதுமாக விசாரிக்காமல் நானும், ஸ்வாதியும்தான் ஒடிச்சென்று திருமணம் செய்து கொண்டதாக சகட்டுமேனிக்கு எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஸ்வாதிக்கும், அஜய்க்கும் திருமணம் நடந்து முடிந்து ஒரு வருடம் ஆகப்போகிறது. ஆனால், கடந்த வாரம்கூட ஒரு பெரிய பத்திரிகையில் நானும், ஸ்வாதியும் திருமணம் செய்து கொண்டதாக செய்தி வெளியானது. இப்படி தீர விசாரிக்காமல் செய்தி வெளியிடுவதால், என்னைப்போன்ற வளர்ந்து வரும் நடிகர்களின் எதிர்காலம்தான் பாதிக்கப்படுகிறது.
* இந்த செய்தியை நீங்கள் மீடியாக்களிடம் சொல்லி தெளிவுபடுத்தியிருக்கலாமே?
என்னிடம் கேட்பவர்களிடத்தில் தெளிவுபடுத்திக் கொண்டு தான் வருகிறேன். மேலும், இந்த விசயத்தை என்னிடம் தெரிவித்த ஸ்வாதியின் அம்மா, மகள் ஓடிப்போன விசயத்தை வெளியில் சொன்னால் அசிங்கமாக நினைப்பார்கள் என்று அழுதார். அதனால்தான் நானும் இத்தனை நாளும் வெளியில் சொல்லாமல் இருந்தேன். ஆனால், தொடர்ந்து என்னை ஸ்வாதியுடன் இணைத்து செய்திகள் வந்து கொண்டிருப்பதால் அதை என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அதனால்தான் உங்களைப்போன்ற மீடியாக்களிடம் சொல்லி தெளிவுபடுத்தும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறேன் என்கிறார் லகுபரன்.