ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் சிவகார்த்திகேயன், விஜயசேதுபதியை இருவரையும்தான் போட்டியாளர்களாக நினைக்கிறார்கள். இந்த விசயத்தில் அவர்களுக்கிடையே போட்டி மனப்பான்மை இருக்கிறதோ இல்லையோ ஆனால் கோடம்பாக்கத்தில் இவர்களை போட்டியாளர்கள என்ற மனநிலையிலேயே பார்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில், தன்னுடன் 3 படத்தில் காமெடியனாக நடித்த சிவகார்த்திகேயனை வைத்து பின்னர் எதிர்நீச்சல் என்ற படத்தை தயாரித்தார் தனுஷ். அதையடுத்து இப்போது டாணா படத்தையும் தயாரித்துக்கொண்டிருக்கிறார். இதையடுத்து அவர் விஜயசேதுபதியை வைத்தும் ஒரு படம் தயாரிக்கப்போவதாக கூறப்படுகிறது.
அதைப்பார்த்த அவரது நண்பர்கள் சிலர், சிவகார்த்திகேயனுக்கு போட்டி நடிகர்தான் விஜயசேதுபதி, அப்படியிருக்க, அவரைப்போய் உங்கள் படத்தில் நடிக்க வைப்பதேன்? என்று கேட்டார்களாம். அதற்கு, என்னைப்பொறுத்தவரை சிவகார்த்திகேய்ன- விஜயசேதுபதி இருவருமே நல்ல நடிகர்கள். இரண்டு பேருமே ஒரே மாதிரியில்லாமல் வெவ்வேறு பாணியில் வெவ்வேறு விதமான கதைகளை செலக்ட் பண்ணி நடிக்கிறார்கள்.
அதனால் அவர்களை வைத்து வித்தியாசமான படங்கள் தயாரிக்கும் ஆசைதான் எனக்கு ஏற்படுகிறது. இந்த இடத்தில் நான் அவர்களை போட்டியாளர்களாக பார்க்கவில்லை. நல்ல திறமைவாய்ந்த நடிகர்களாக மட்டுமே பார்க்கிறேன். மேலும், என்னைக்கேட்டால் அவர்கள் ஒருவரையொருவர் போட்டியாக நினைத்துக் கொண்டதாகவும் தெரியவில்லை. அவரவர் வேலையை சரியாக செய்து கொண்டிருப்பதாகத்தான் பார்க்கிறேன் என்றாராம்.