ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் ஆகிய படங்களை இயக்கியவர் சிம்புதேவன். அவர் கடந்த ஆண்டே விஜய்யை சந்தித்து ஒரு கதை சொன்னார். அதில் திருப்தியான விஜய், அடுத்த ஆண்டு பார்க்கலாம் என்று சொன்னவர், பின்னர் துப்பாக்கி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் கத்தியில் நடித்ததால் அதுபற்றி அவருக்கு எந்த பதிலும் சொல்லாமல் இழுத்தடித்து வந்தார்.
இதனால், அடுத்த ஆண்டு பார்க்கலாம் என்று சொன்னவரிடமிருந்து ஒரு பதிலும் இல்லையே என்று தடுமாறிப்போய் இருந்தார் சிம்புதேவன். இதற்கிடையே கடைசியாக தான் இயக்கிய ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் படமும் தோல்வியடைந்ததால் விஜய்யிடமிருந்து ஒருவேளை பாசிட்டீவான பதில் வராதோ என்று குழம்பிப்போய் இருந்தார்.
ஆனால், கத்தி இறுதிகட்டத்தை நெருங்கியதை அடுத்து, திடீரென்று ஒருநாள் அழைத்த விஜய், படப்பிடிப்புக்கான வேலைகளை தொடங்குங்கள் என்று சிம்புதேவனுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்தார். அதனால், இதற்காகவே மாதக்கண்ககில் காத்துக்கொண்டிருந்த அவர், இப்போது அதிரடியாக அடுத்த கட்ட வேலைகளில் இறங்கி விட்டார்.
இந்நிலையில், கதையில் விஜய்யின் டேஸ்டுக்கேற்ப திருத்தம் செய்து கொண்டிருக்கும் சிம்புதேவன், பெரும்பாலான படப்பிடிப்பை மும்பையில்தான் நடத்துகிறாராம். அதனால் தற்போது மும்பையில் முகாமிட்டு ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டிருப்பவர், அவ்வப்போது லொகேஷன்களையும் பார்த்து வருகிறாராம்.