ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பத்மாமகன் இயக்கி தயாரிக்கும் நேற்று இன்று படத்தில் நந்தகி, அருந்ததி ஆகிய இருவரும் கதாநாயகியாக நடித்தாலும், அருந்ததிக்குத்தான் முக்கியமான கதாபாத்திரம். தீவிரவாதிகளுடன் காட்டுக்குள் பயணமாகும் பாலியல்தொழிலாளி வேடத்தில் நடித்திருக்கும் அருந்ததி, ஒரு பாடல் காட்சியில் உள்ளாடை அணியாமல் வெறும் பனியன் மட்டும் அணிந்து நடித்திருக்கிறார்.
இந்த வேடத்தில் நடிக்க சுமார் 20 நடிகைகளைப் பார்த்த இயக்குநர் பத்மா மகன், பனியன் அணிந்து நடிக்க வேண்டும் என்று சொன்னதும் முடியாது என்று அத்தனை பேருமே பின்வாங்கியநிலையில்தான், அருந்ததி தைரியமாக இந்த வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். பனியன் அணிந்து அருந்ததி நடித்த காட்சிகளால்தான் நேற்று இன்று படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது.
அதைப் பற்றி கவலைப்படாத இயக்குநர் பத்மாமகன்,இந்தப் படத்துக்குப் பிறகு அருந்ததியின் வேல்யூ நிச்சயம் உயரும். அது மட்டுமல்ல, என்ன கேரக்டர் கொடுத்தாலும் நடிக்கக் கூடிய நடிகை என்ற பெயரும் அவருக்குக் கிடைக்கும் என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார். தென்காசி அருகில் உள்ள அச்சன்குளம் என்ற மலைப்பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றபோது, தினமும் 5 மணி நேரம் காட்டுப்பகுதியில் நடந்து சென்று படப்பிடிப்பு நடத்தினார்களாம். அருந்ததியும் தினமும் 5 மணி நேரம் நடந்திருக்கிறார்.