ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
நாட்டின் 15வது பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்கவில்லை என நடிகரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.வின், தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பிரதமராக மோடி இன்று மாலை பதவியேற்க உள்ளார்.
இந்த விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்ஷே உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்கள் தவிர நாட்டின் மாநில முதல்வர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மோடி பதவியேற்பு விழாவில், ராஜபக்ஷே பங்கேற்பதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக பா.ஜ., கூட்டணியில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ராஜபக்ஷேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். இவர் தவிர தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பிற கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே நடிகர் ரஜினியும், மோடி விழாவில் பங்கேற்மாட்டார் என தெரிகிறது. தேர்தலுக்கு முன்பு இருந்தே, மோடி - ரஜினி இருவருக்கும் நல்ல பரஸ்பர நட்பு இருந்து வருகிறது. அதன்காரணமாகத்தான் தமிழகத்தில், மோடி தேர்தல் சுற்றுபயணம் மேற்கொண்டபோது, நடிகர் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். மோடி, எனது நண்பர் என்று ரஜினி தெரிவித்தார். மேலும் அவர் வெற்றி பெற்றபோது வாழ்த்தும் தெரிவித்தார், அதேப்போல் மோடியும் பதிலுக்கு நன்றி தெரிவித்து இருந்தார். அதன்வெளிப்பாடாகத்தான் தான் பதவியேற்கும் விழாவில், ரஜினியும் கலந்து கொள்ள வேண்டும் என்று அவருக்கு அழைப்பு விடுத்தார் மோடி.
இந்நிலையில் இன்று நடக்கும் பதவியேற்பு விழாவில், ரஜினி பங்கேற்கவில்லை. ரஜினி, தற்போது லிங்கா படப்பிடிப்புகளில் மிகவும் பிஸியாக இருப்பதால் இந்த விழாவில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. அதேசமயம், இலங்கை தமிழர் விவகாரத்தில், தமிழர்களுக்கு துரோகம் இழைத்த ராஜபக்ஷே, மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதால் தான், ரஜினி பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
ரஜினி வீட்டு முன் மாணவர்கள் மறியல்
இந்தநிலையில் ரஜினி, நரேந்திரமோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து "பாலசந்தர் மாணவர் கூட்டமைப்பு" என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேற்று (மே 25) திடீரென்று போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டு முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். உடனே அந்த இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அவர்களை கலைந்து போகச் சொன்னார்கள். அதையும் மீறி அவர்கள் கோஷமிட்டுக்கொண்டே இருந்ததால் அதற்கு தலைமை தாங்கிய ஆனந்த் என்பவர் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இரவில் விடுதலை செய்யப்பட்டனர்.
இதேபோல நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டின் முன்பும் மறியல் போராட்டம் நடக்கப்போவதாக வந்த தகவலையொட்டி அங்கு போலீஸ் குவிக்கப்பட்டார்கள்.