ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சூர்யா தனது தம்பி கார்த்தியை சினிமாவில் கொண்டு வந்தது போல் ஆர்யாவும் தனது தம்பி சத்யாவை சினிமாவில் பெரிய நடிகராக்கி விட வேண்டும் என்று படித்துறை என்ற படத்தில் அறிமுகம் செய்தார். ஆனால் அந்த படம் இன்னும் படித்துறையை விட்டே இடம்பெயரவில்லை. அதனால் அதையடுத்து, டி.வி நடிகர் விஜய்ஆதிராஜ் இயக்கிய புத்தகம் படத்தில் நடிக்க வைத்தார்.
அதோடு அந்த படத்தில் தம்பி நடித்த ஒரு சண்டை காட்சியை ஹைலைட் பண்ணி, நான்கூட 15 படங்களில் நடித்து விடடேன் ஆனால் என் தம்பி அளவுக்கு சண்டை காட்சியில் பஞ்ச் கொடுத்ததில்லை என்று பில்டப் கொடுத்து வந்தார். ஆனால், ஆர்யாவை கவர்ந்த அந்த படம் ரசிகர்களை கவரவில்லை. அதனால் சத்யா நடிப்பில் வெளியான முதல் படமே ப்ளாப் ஆகி விட்டது.
அதையடுத்து தம்பியை வைத்து படம் தயாரிக்க யாருமே முன்வரமாட்டார்கள் என்பதை தெரிந்து கொண்ட ஆர்யா, இப்போது அமரகாவியம் படத்தை தானே தயாரித்திருக்கிறார். அதோடு, சமீபத்தில் அந்த படத்தைப்பார்த்த தனக்கு அழுகை வந்துவிட்டதாகவும் ஒரு பப்ளிசிட்டி டிராமாவை முடுக்கி விட்டிருந்தார்.
அதோடு நிறுத்தவில்லை, இப்போது, அமரகாவியம் தமிழ்சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு சிறந்த காதல் படமாக இருக்கும் என்று கூறி வரும் ஆர்யா, தம்பி சத்யா இந்த படத்தில் நடிப்பில் சிகரம் தொட்டு விட்டதாக அடுத்த பில்டப்பை எடுத்து விட்டு வருகிறார். ஆனால் அவர் சொல்லும்போது அப்படியா அப்படியா என்று ஆச்சர்யத்துடன் கேட்பவர்கள், அவர் திரும்பியதும் குபீர் என்று சிரிக்கின்றனர்.