ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அட்டகத்தி படத்தில் அறிமுகமான இரண்டு நடிகைகள் நந்திதா- ஐஸ்வர்யா. இதில் நந்திதாவுக்கு அதே பெயரில் வேறு நடிகைகள் இல்லாததால் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், ஐஸ்வர்யாவுக்கு அந்த பெயரே ஒரு பிரச்னையாக இருந்தது. அதே பெயரில் பீல்டில் பல நடிகைகள் இருந்ததால் தன்னை எப்படி அடையாளம் காட்டுவது என்று யோசித்தவர் அட்டகத்தியை பெயருக்கு முன்னாடி சேர்த்துக்கொண்டார்.
ஆனால், பின்னர் அவர் ஆரூடம் பார்த்தபோது, அவரது தந்தையின் பெயரை சேர்த்துக்கொள்ளுமாறு ஜோதிடர் சொன்னதையடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் ஆனார். அந்த பெயருடன் அதன்பிறகு விஜயசேதுபதியுடன் பண்ணையாரும் பத்மினியும், ரம்மி படங்களில் நடித்தவர், இப்போது இடம்பொருள் ஏவல், திருடன் போலீஸ் ஆகிய படஙக்ளிலும் நடித்து வருகிறார்.
ஆனால் இந்த நேரத்தில் நகுல், தினேஷ் நடித்து வரும் தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் என்ற படத்தில் ஒரு ஹீரோயினியாக பிந்து மாதவி நடிக்க, இன்னொரு ஹீரோயினியாக ஐஸ்வர்யா தத்தா என்றொரு நடிகை அறிமுகமாகிறார். ஏற்கனவே தான் ஐஸ்வர்யா என்ற பெயரில் பீல்டில் இருக்கும்போது அதே பெயரில் இன்னொரு நடிகையும் என்ட்ரி ஆவதால், ஐஸ்வர்யா என்ற பெயருடன் தான் அறிமுகமானதே தவறு என்று வருத்தத்தில் இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஆனபோதும், இதே பெயரில் என்ட்ரியாகும் பதிய நடிகைகளால் தனக்கு எந்தவித பாதிப்பும் வரக்கூடாது என்பதால் நடித்து வரும் படங்கள் திரைக்கு வருவதற்கு முன்பு மீடியாக்களில் பெரிய அளவில் பப்ளிசிட்டியை முடுக்கி விட்டு தனது பெயரை ரசிகர்களின் மனதில் அழுத்தமாக பதிய வைக்கப்போகிறாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்.