ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சாதாரணமாவே சந்தானத்தோட சலம்பல் அதிகமா இருக்கும். 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்துல ஹீரோவா நடிச்சதுக்குப் பிறகு கேக்கவா வேணும். வெறும் காமெடி நடிகனாக நடிக்கும் படங்களின் பிரமோஷனுக்காக எந்த பத்திரிகையாளர் சந்திப்பு, டிவி பேட்டி என எதற்கும் வராத சந்தானம், தான் ஹீரோவாக நடித்த படத்தை ஓட வைக்க ஊர் ஊராக சுற்றி வந்தார் என்பதை தமிழ்த் திரையுலகம் ஆச்சரியத்துடனும், ஆத்திரத்துடனும் பார்த்துக் கொண்டிருக்கிறது.
அவர் ஹீரோவாக நடிக்க முடிவெடுத்ததே சிவகார்த்திகேயனால்தான் என்ற ஒரு பேச்சும் இருந்து வருகிறது. தன்னைப் போலவே தொலைக்காட்சியில் நிகழ்ச்சி செய்து கொண்டிருந்த சிவகார்த்திகேயன் முன்னணி ஹீரோவாக வளர்ந்ததைக் கண்டு சந்தானத்தால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையாம். அதனால்தான் அவரும் ஹீரோவானார் என்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் சிவகார்த்திகேயனைப் பற்றி பேசிய சந்தானம், உதாரணத்திற்காக காடு, மிருகம் என 'காமெடி'யாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு சீரியசாகப் பேசியிருக்கிறார். “எனக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையில எந்த போட்டியும் கிடையாது. கமல் சார் ஒரு முறை சொல்லியிருக்கிறாரு. சினிமாங்கறது காடு மாதிரி. அதுல இருக்கிற எல்லாருமே மிருகங்க மாதிரி, அது அது வேலையைப் பார்க்கிற மாதிரி, நானும் என் வேலையைப் பார்த்திட்டிருக்கேன்,” என்று பேசியுள்ளார்.