ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
யாமிருக்க பயமே படத்தில் ரூபா மஞ்சரி கதாநாயகி என்றாலும், மற்றொரு நாயகியாக ஓவியா நடித்திருந்தார். முன்னணி கதாநாயகியாக அவர் இருந்தாலும் யாமிருக்க பயமே படத்தில் அவர் நடித்தது சில்க் ஸ்மிதா நடித்த வேடங்கள் போல் கவர்ச்சியான வேடம். ஓவியாவின் கவர்ச்சிதான் இளைஞர்களை தியேட்டருக்கு இழுத்து வந்தது என்றெல்லாம் திரையுலகில் சொல்லப்பட்டநிலையில், யாமிருக்க பயமே படத்தின் புரமோஷன்களில் ஓவியா மிஸ்ஸிங். அது மட்டுமல்ல, அண்மையில் நடைபெற்ற சக்ஸஸ்மீட்டிலும் ஓவியாவின் தலை தென்படவில்லை.
என்ன காரணம் என்று விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்தான் இது...
யாமிருக்க பயமே படத்தின் முழு படப்பிடிப்பும் டில்லி அருகில் உள்ள நைனிடால் என்ற ஊரில்தான் நடைபெற்றது. படக்குழுவினர் சுமார் 60 நாட்கள் அங்கேயே தங்கி ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்துவிட்டு வந்தனர். நைனிடாலில் படப்பிடிப்பு நடைபெற்றபோது, விரும்பத்தகாத பல சம்பவங்களை சந்தித்திருக்கிறார் ஓவியா. அதன் காரணமாக இயக்குநர் டிகே மற்றும் கதாநாயகன் கிருஷ்ணா உடன் பெரிய சண்டையே போட்டிருக்கிறார் ஓவியா.
சென்னைக்கு திரும்பியதும் இது தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமாரிடம் பஞ்சாயத்து பண்ணினாராம் ஓவியா. இதன் காரணமாகவே யாமிருக்க பயமே படத்தின் புரமோஷன், சக்சஸ்மீட் உட்பட எதற்கும் ஓவியாவை அழைக்கவில்லையாம். ஓவியாவை கூப்பிட்டால் நடந்த சம்பவங்களை பற்றி மீடியாக்களிடம் வாய் திறந்துவிடுவார் என்று பயந்துவிட்டார்களோ?