ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
புகைப்படங்கள் விளம்பர டிசைன் வெளியானதுமே பூவரசம் பீப்பீ படம் பற்றிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் பரவலான கவனிப்பையும் பெற்றுள்ளது. படத்தின் தலைப்பே பால்யகாலத்தில் நம்மை தள்ளி பரவசப்படுத்தி விடுகிறதே. அதன் இயக்குநர் ஹலிதா ஷமீம் பேசியதாவது, நான் முதலில் உதவி இயக்குநராக வேலை பார்த்தது புஷ்கர் காயத்ரியிடம். பிறகு சமுத்திரக்கனி, மிஷ்கின் என்று பணியாற்றினேன். சில படங்களின் அனுபவங்களுடன் என்மேல் எனக்கு நம்பிக்கை வந்தவுடன் படம் இயக்க தீர்மானித்தேன். என்மேல் நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்தவர் சுஜாதா செந்தில்நாதன்.
பூவரசம் பீப்பீ ஒரு ஹாலிடே அட்வெஞ்சர் பிலிம் என்று கூறலாம். சிறுவர்களின் மனது தண்ணீர் போன்றது கனமான எதைப் போட்டாலும் உள்வாங்கிக் கொள்ளும். பால்ய காலத்தின் பள்ளி விடுமுறை காலம் அற்புதமானது. கிராமத்து சிறுவர்களுக்கு பீப்பி ஊதுவதும், பொன்வண்டு பிடிப்பதும், நீச்சல் அடிப்பதும், கில்லி விளையாடுவதும்தான் அவர்களுக்கு பிடித்தது. அப்படி விளையாடித் திரியும் மூன்று சிறுவர்கள் ஒரு கொடூரமான வன்முறையை நேரில் பார்க்க நேரிடுகிறது. அந்த காட்சி அவர்களை எப்படி மாற்றுகிறது அதன் பாதிப்புகள் விளைவுகள் போக்குகள் என்ன என்பதை அவர்களின் மனநிலையில் இருந்து பேசுகிற படம்.
இது குழந்தைகள் படமல்ல. எல்லாருக்குமான படம். தியேட்டர் மூடுள்ள படம். எமோஷனலாக இருக்காது. அறிவு பூர்வமாக இருக்கும். அழவைக்காது, ரசிக்கவைக்கும். படப்பிடிப்பு 75% பொள்ளாச்சி பகுதியில் நடந்தது. 62 நாட்களில் முழுப்படத்தையும் முடித்தோம். சுதந்திரமான முயற்சியாக இறங்கி எங்களால் முடிந்த அளவுக்கு உழைத்து இருக்கிறோம். சிறிய முயற்சியாக ஆரம்பித்து பெரிய படமான ஆகியிருக்கிறது. பூவரசம் பீப்பீ மே 30ல் வெளியாகவுள்ளது என்றார்.