ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் முன்னணி ஹீரோயின் தான் தனக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்பதை பாலிசியாக கொண்டுள்ளார் உதயநிதி. அதனால்தான் முதல் படத்தில் ஹன்சிகாவை நடிக்க வைத்தவர், அதையடுத்து இது கதிர்வேலன் காதல் படத்தையடுத்து நண்பேன்டா படத்திலும் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
அதேபோல் அடுத்தபடியாக தான் நடிக்கும் படத்திற்கும் ஒரு முன்னணி நடிகைதான் என்பதில் உறுதியாக இருந்த உதயநிதி, இப்போது சமந்தா தமிழில் வேகமாக வளர்ந்து வருவதால் அவருடன் நடித்து விடவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார். தற்போது அஞ்சான், கத்தி படங்களில் நடித்து வரும் அவர், அடுத்து விக்ரம் நடிக்கும் படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
அதனால் அதையடுத்து தான் நடிக்கும் படத்தில் சமந்தாவை தனக்கு ஜோடியாக்கி விட அவரை அணுகியுள்ளார் உதயநிதி. ஆனால், தற்போது தெலுங்கிலும் மூன்று படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் சமந்தா, உதயநிதிக்கு சாதகமான பதிலை இன்னும் சொல்லவில்லையாம். என்றாலும் கால்சீட் இருந்தால் பார்க்கலாம் என்று பட்டும் படாமலும்தான் சொல்லியிருக்கிறாராம்.
இருப்பினும், தனக்கு ஒரு நடிகையுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டால் அவர்கள் எத்தனை கோடிகள் கேட்டாலும் சொல்லியடித்து அவர்களை புக் பண்ணும் மனநிலை கொண்ட உதயநிதி, சமந்தாவிடமிருந்து தனக்கு சாதகமான பதில் வராவிட்டால், அடுத்தபடியாக அவரது வழக்கமான சம்பளத்திற்கும் மேலே சில கோடிகளை வைத்தாவது அவரை தன் படத்துக்கு புக் பண்ணிவிட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறாராம்.