ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை ஹன்சிகாவுக்கு ஏழை குழந்தைகள் மேல் எப்போதுமே அன்பு அதிகம். இதுவரை 25 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தற்போது வாலு படத்தின் ஷூட்டிங்கில் இருக்கும் ஹன்சிகா. படப்பிடிப்பு முடிந்ததும் தனது வளர்ப்பு குழந்தைகளை அழைத்துக் கொண்டு குலுமணாலிக்கு சுற்றுலா செல்கிறார். "ஹன்சிகா இப்போது பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால் அவரால் குழந்தைகளுடன் அதிக நாள் இருக்க முடியவில்லை. நான்தான் பார்த்துக் கொள்கிறேன். அதனால்தான் இந்த சுற்றுலா ஏற்பாடு" என்கிறார் ஹன்சிகாவின் அம்மா.
இதற்கிடையில் ஒரு முதியோர் இல்லம் கட்டும் தன் ஆசையை ஹன்சிகா வெளியிட்டிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: "என்னோட 3வது பிறந்த நாளுக்கு, அம்மா அனாதை இல்லத்துக்கு அழைத்துச் சென்று அங்குள்ள குழந்தைகளுடன் விளையாட வைத்து பிறந்த நாளை கொண்டாடினார். அன்று முதல் இன்று வரை அனாதை குழந்தைகளுடன்தான் எனது பிறந்த நாள். அப்புறம் நான் சம்பாதிக்க ஆரம்பிச்சதும் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பிச்சேன். என்னை பார்த்ததும் ஓடிவந்து கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்கிற அவுங்க அன்புக்கு நிகரா உலகத்துல எதுவுமே இல்லை. இப்ப குழந்தைங்களை பார்த்துக்கிற மாதிரி கைவிடப்பட்ட வயதானவர்களையும் பார்த்துக்கணுங்ற ஆசை இருக்கு. ஒரு முதியோர் இல்லம் கட்டும் திட்டத்தில் இருக்கிறேன். அதுக்காக நிறைய படங்கள் நடிக்கணும், நிறைய சம்பாதிக்கணும்" என்கிறார் ஹன்சிகா.