ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் நல்லாசியுடன், ராஜம் புரொடக்ஷன்ஸ் சார்பில் புஷ்பா கந்தசாமி எஸ்.மோகன் இணைந்து தயாரிக்கும் படம் “ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி”. பரத், நந்திதா, தம்பி ராமையா, ரேணுகா, இமான் அண்ணாச்சி, எம்.எஸ்.பாஸ்கர், சூது கவ்வும் கருணா, மதன் பாப், சாம்ஸ், பாண்டு, சிங்கம்புலி, படவாகோபி, அன்பு, விமல், கோவைசெந்தில்,சுப்புராஜ், கோமல்குமார், கொட்டாச்சி மற்றும் பலர் நடித்துள்ளனர். ரவிசந்தர் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு பழனி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி மற்றும் கேரளா போன்ற இடங்களில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஐந்து பாடல்கள் இடம் பெறுகின்றன. ஒவ்வொரு பாடலையும் அற்புதமாக இசையமைத்துள்ளார், 555-படத்தின் இசையமைப்பாளரான சைமன்.
இவர், இப்படத்தில் கானா பாலா எழுதிய ஒரு பாடலுக்கு இன்னொருவர் பாடினால் புதுமையாக இருக்குமே என்று விரும்பினார். எனவே, காங்கோ நாட்டைச் சேர்ந்த ராப் இசைக் கலைஞர் யபாமா ஜோ-வை வைத்து “ஏழரை...” என்ற பாடலை பாட வைத்துள்ளார். இப்பாடல் அனைவரையும் ஆட வைக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை. இசைப் பிரியர்களுக்கு இப்பாடல் ஒரு புதுமையான கொண்டாட்டம்தான் என்கிறார் சைமன்.
இதேப்போல், யுகபாரதி எழுதிய “ஒண்ணுனா ரெண்டு...” என்ற பாடலை விஜய் ஆண்டனி பாடியுள்ளார்.