ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சந்தானம் முதன்முதலாக நாயகனாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் திரைக்கு வந்த சில நாட்கள் தியேட்டர்களில் கூட்டம் எதிர்பார்த்தபடி கூடவில்லை. ஆனால், பின்னர் சில நாட்களில் எதிர்பாராதவிதமாக கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. அதனால், அதற்கடுத்த வாரமே சில தியேட்டர்களை அதிகப்படுத்தியவர்கள் இப்போது மேலும் 50 தியேட்டர்களில் கூடுதலாக படத்தை திரையிட்டுள்ளார்களாம்.
தற்போது களத்தில் சந்தானத்திற்கு போட்டியாக சரியான படங்கள் எதுவும் இல்லாததால் சூழ்நிலை சந்தானத்துக்கு சாதகமாகி விட்டது. அதனால், ஏற்கனவே ஓரளவு உற்சாகமடைந்த சந்தானம் இப்போது இன்னும் உற்சாகத்தில் துள்ளிக்குதித்துக்கொண்டு திரிகிறார். இதற்கு இன்னொரு காரணம் உண்டு. அவர் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் வசூலை விடவும் இப்படம் இன்னும் சில நாட்களில் அதிகரித்து விடுமாம்.
அதனால், தான் ஷோலோ ஹீரோவாக நடித்த முதல் படமே ஹிட்டடித்து விட்டதாக தனது நண்பர்களுக்கு சமீபத்தில் பார்ட்டி கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட சந்தானத்திடம், அப்படியென்றால் அடுத்த படம் எப்போது? என்றும் அவர்கள் கேட்டார்களாம். அதற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? உடனுக்குடன் ஹீரோ வேசம் போட்டால் அதற்கு மரியாதை இல்லாமல் போய் விடும. சந்தானம் ஹீரோவாக நடித்த படம் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்க வேண்டும். அப்படி அவர்களை எதிர்பார்க்க வைத்து படங்கள் கொடுத்தால்தான் அதற்கு வரவேற்பு அதிகமாக இருக்கும். அதனால் ஒரு சிறிய இடைவெளி விட்டுத்தான் அடுத்த படத்தில் நடிப்பேன் என்கிறாராம் சந்தானம்.