ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
2010ல் பன்சாலி இயக்கிய குசாரிஷ் என்ற இந்தி படத்திற்கு பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்கவில்லை ஐஸ்வர்யாராய். இந்த காலகட்டத்தில் ஆரத்யாவை பெற்றெடுத்த அவர் இப்போதுவரை மகளை பராமரிப்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், கடந்த ஒரு வருடமாக இந்தி டைரக்டர்கள் சிலர் அவரை அணுகி கதை சொன்னபோது, தனக்கு பொருந்தாத கதை என்பதால் மறுத்து வந்த ஐஸ்வர்யாராய், மணிரத்னம் தனது புதிய படத்தில் நடிக்க கேட்டபோதும் மறுத்து விட்டார். இந்த நிலையில், தற்போது அவர் நடிக்கத்தாயராகி விட்டதாக மும்பையில் இருந்து வரும் செய்திக்ள தெரிவிக்கின்றன.
சஞ்சய்குப்தா என்பவர் இயக்கும், 'ஜஸ்பா' என்ற படத்தில் ஐஸ்வர்யாராய் நடிப்பதாக உறுதியான செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப்படம் ஒரு த்ரில்லர் படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் டைரக்டர் சஞ்சய்குப்தா தனது டுவிட்டரில், தனது படத்தில் வித்தியாசமானதொரு வேடத்தில் நடிக்கும் ஐஸ்வர்யாராய், தற்போது தனது உடல் கட்டை கணிசமான அளவு குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும தெரிவித்திருக்கிறார்.
ஆக, 4 ஆண்டு இடைவெளிக்குப்பிறகு ஒரு த்ரில்லர் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க வருகிறார் ஐஸ்வர்யாராய்.