14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
உதிரிப்பூக்கள் மகேந்திரன் சிறிய இடைவேளைக்குப்பிறகு ஒரு படம் இயக்குவதாக சில மாதங்களுக்கு முன்பே அறிவித்தார். அதோடு தனது ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜாவே அப்படத்துக்கு இசையமைப்பதாக அறிவித்தவர். எனது படங்களுக்கான டைட்டீலை பெரும்பாலும் இளையராஜாதான் முடிவு செய்வார். அந்த வகையில் இந்த படத்துக்கு டைட்டீல் வைக்கும் பொறுப்பையும் அவரிடமே விட்டு விட்டேன் என்றும் கூறினார்.
மேலும், அப்படத்தை சிலர் இணைந்து தயாரிப்பதாக இருந்தனர். ஆனால், மகேந்திரன் போட்ட சில நிபந்தனைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் அவர்கள் ஓட்டம் பிடித்து விட்டனர். அந்த நேரத்தில்தான் நடிகர் பிரகாஷ்ராஜிடம் அந்த கதையை சொல்ல வைத்து அவரை தயாரிப்பாளராக்கினார் இளையராஜா.
இதையடுத்து கதை விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, அப்படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அப்பா வேடத்துக்கு ராஜ்கிரணை தான் பேசியிருப்பதாக சொன்னாராம் மகேந்திரன். ஆனால், அதைக்கேட்ட பிரகாஷ்ராஜ்க்கு பெரிய அதிர்ச்சியாம். காரணம், அந்த அப்பா கேரக்டரில் தான் நடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்த படத்தை தான் தயாரிக்கவே முன்வந்தாராம்.
இதை அவர் டைரக்டர் மகேந்திரனிடம் சொன்னபோது, முதலில் தயங்கினாராம். ஆனபோதும், ஒருவேளை அவர் எதிர்பார்த்த வேடத்தை கொடுக்கவில்லையென்றால் தயாரிப்பில் இருந்து விலகி விடுவாரோ என்று நினைத்தவர், உடனடியாக ராஜ்கிரணை நீக்கி விட்டு, பிரகாஷ்ராஜ்க்கு அந்த வேடத்தை கொடுத்து விட்டாராம்.
ஆக, நிபந்தனைகள் போட்டு படம் பண்ணக்கூடிய மகேந்திரனையும், காலத்தின் கட்டாயம், பிரகாஷ்ராஜின் நிபந்தனைக்கு உட்பட வைத்து விட்டது.