ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் மயில்சாமி, சில நடிகர்களைப்போன்று பில்டப்பெல்லாம் கொடுக்க மாட்டார். எல்லோரிடமும் யதார்த்தமாக பேசி பழகும் சுபாவம் கொண்டவர். அதனால் தனக்கு தமிழ் எழுதப்படிக்கத் தெரியாது என்பதைகூட ஓப்பனாக சொல்லும் அவர், பேசத் தெரிந்த ஒரே மொழி தமிழ் மட்டுமே என்கிறார்.
அதன்காரணமாகவே, வெளிநாடுகளுக்கு படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும் என்றாலே அவருக்கு அலர்ஜியாம். அங்கு விமானத்தில் சென்று இறங்கும்போது அங்கிருப்பவர்கள் ஏதாவது ஆங்கிலத்தில் பேசினால் எப்படி பதில் கொடுப்பது என்று சொல்லும் மயில்சாமி, பெரும்பாலும் அவுட்டோர் படப்பிடிப்பு என்றாலே பயத்துடன்தான் சென்று வருகிறாராம்.
அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள யாமிருக்க பயமே என்ற படத்தில் ஒரு காமெடி வேடத்தில் நடித்திருக்கும் அவர், அந்த படத்துக்காக டி ல்லியில் இருந்து 3 மணி நேரம் காரில் படப்பிடிப்பு நடந்து ஸ்பாட்டுக்கு சென்றாராம்., அங்கே சென்று பார்த்தால், பல நாட்களாக சாப்பிடாதவர்கள்போல் யூனிட் நபர்கள் காணப்பட்டார்களாம். காய்ந்த சப்பாத்திகளையே பல நாட்களாக அவர்கள் சாப்பிட்டு வருகிற சேதியறிந்த மயில்சாமி, உடனே மொத்த யூனிட்டுக்கும் சமைக்கும் வேலைகளில் இறங்கி விட்டாராம். தனது கைப்பக்குவத்தில் தான் அந்த படப்பிடிப்பில் இருந்த 5 நாட்களும் அவர்களுக்கு வகை வகையாக சமைத்து போட்டாராம்.
அது மட்டுமின்றி, தான் நடிக்கும் எந்த படத்தின் யூனிட் அவுட்டோர்களில் மலைப்பிரதேசம் மற்றும் காட்டுப்பகுதியில் முகாமிட்டிருந்தாலும், இப்படித்தான் அவர்களுக்கு சரியான உணவுகள் கிடைக்காது என்பதால், தானே சமைத்துக்கொடுக்கத் தொடங்கி விடுவாராம். அதனால் யூனிட்டில் உள்ளவர்கள் மயில்சாமியை அப்பா என்று அன்போடு அழைக்கிறார்கள்.