ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் “யான்” திரைப்படத்தின் மூலமாக முதன் முறையாக இயக்குநராக அறிமுகமாகிறார். ஜீவா கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராதாவின் இளைய மகள் துளசி நடிக்கிறார். இவர்களுடன் நாசர், பிரகாஷ் ராஜ், போஸ் வெங்கட் மற்றும் பலர் நடிக்கின்றனர். ரவி.கே.சந்திரனின் உதவியாளர் மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு செய்ய ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் நிறுவனத்திற்காக எல்ரெட் குமார், ஜெயராமன் இப்படத்தை தயாரிக்கின்றனர்.
“யான்” படத்தில் முக்கிய காட்சிகள் மொரோக்கோ நாட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது. ஒரு சாலையோரத்தில் ஜீவா தீவிரவாதிகளால் கடத்தப்படுவதை போல் ஒரு காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதை கேள்விப்பட்ட மொரோக்கோ நாட்டின் காவல்துறையினர் உடனடியாக படப்பிடிப்பு தளத்திற்கு வந்து, “எங்கள் நாட்டில் தீவிரவாதிகள் கடத்துவதை போல் படம் பிடித்தீர்கள் என்றால் அது எங்கள் நாட்டிற்கு அவப்பெயர்” என்று கூறியதோடு கேமரா மற்றும் படப்பிடிப்பு கருவிகளை கைப்பற்றி சென்றுவிட்டனராம்.
அதுமட்டுமல்ல, படப்பிடிப்பில் இருந்த இயக்குநர் ரவி.கே.சந்திரன், நடிகர் ஜீவா மற்றும் ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தன் ஆகியோரையும் உடன் அழைத்து சென்றுள்ளனர். படப்பிடிப்பு கருவிகளை கைப்பற்றியது மட்டுமின்றி, அழைத்து சென்ற படக்குழுவினர் மீது மொரோக்கோ காவல்துறையினர் வழக்கு போட முற்பட்டுள்ளனர்.
பின்னர், யான் படக்குழுவினரை மொரோக்கோ நாட்டிற்கு அழைத்து சென்ற டூரிஸ்ட் புரோக்கரை அணுகியுள்ளனர். “யான்” படக்குழுவினர் மற்றும் டூரிஸ்ட் புரோக்கர் வேண்டுகோளுக்கு இணங்கி, மொரோக்கோ காவல்துறையினர் “யான்” படக்குழுவினரிடம் மன்னிப்பு கடிதம் பெற்றுக்கொண்டு படக்குழுவினரை எச்சரித்து அனுப்பி உள்ளனர்.
பின்னர் அந்த காட்சியை மீண்டும் படம் பிடிக்க, சென்னை ஈ.சி.ஆர் சாலை ஓரம், மொராக்கோ சாலை போல செட் போடப்பட்டது.
மொராக்கோ நாட்டின் சாலை போல் அமைக்கப்பட்ட அந்த செட்டில் ஜீவா'வை தீவிரவாதிகள் கடத்துவது போல் ஒரு காட்சி படமாக்கப்பட்டுள்ளது.