ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
செளந்தர்யா இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள கோச்சடையான் அனிமேஷன் படம் எப்போதோ ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஆனால், படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் பேரம் படியாமல் பல மாதங்களாக அவர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்குமிடையே பேச்சுவார்த்தை நீடித்துக்கொண்டே இருந்தது. குறிப்பாக, கோச்சடையான் அனிமேஷன் படம் என்பதால், அதிக தொகை கொடுத்து வாங்கும் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு என்று சில தியேட்டர்காரர்கள் ஈராஸ் நிறுவனத்திடம் கேட்டு வந்தார்களாம்.
இதற்கிடையே வங்கி லோன் பிரச்சினை இன்னொரு பக்கம். ஆக, மே 9-ந்தேதி வெளியாகயிருந்த கோச்சடையானை பின்னர் 23-ந்தேதிக்கு மாற்றினர். இந்த நிலையில். வங்கி பிரச்சினை முடிவுக்கு வந்தபோதும், தியேட்டர்காரர்கள் பிரச்சினைதான் சுமூக முடிவை எட்டாமல் இருந்திருக்கிறது. அவர்களின் மனநிலையை புரிந்து கொண்ட ரஜினி, இனியும் படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டால் சரிவராது என்று முடிவுக்கு வந்தாராம்.
அதையடுத்து, தியேட்டர் உரிமையாளர்களை சந்தித்து, ஒருவேளை கோச்சடையான் உங்களுக்கு நஷ்டத்தை கொடுத்தால், லிங்காவைத் தொடர்ந்து நான் நடிக்கும் படத்திற்கு வாங்கும் 20 கோடி சம்பளத்தை நஷ்டப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளித்து விடுகிறேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறாராம். இதனால் இத்தனை நாளும், கோச்சடையான் கையை கடித்து குதறி விடுவாரோ என்று பயந்து கொண்டிருந்த தியேட்டர் உரிமையாளர்கள் இப்போது கில்லியாட்டம் 23-ந்தேதியில் படத்தை திரையிட அதிரடியாக களத்தில் இறங்கி விட்டனர்.