ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பல வருடங்களுக்கு முன்பு பள்ளி மாணவர்கள் சிலர் சேர்ந்து தங்கள் ஆசிரியையை குளத்தில் தள்ளி கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் நாகர்கோவில் அருகில் நடந்தது. அந்த சம்பவத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அதனுடன் கற்பனை கலந்து தயாராகி வருகிறது நாகர்கோவில் சந்திப்பு என்கிற படம். பள்ளி ஆசிரியையாக சுகன்யா நடிக்கிறார். அங்காடி தெரு மகேஷ் ஹீரோ, ஜோதி கிருஷ்ணா என்ற புதுமுகம் ஹீரோயின். பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜ் பாஸ்கர் இசை அமைக்கிறார்.
"பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியைக்குமான உறவு அற்புதமானது. அதில் சின்ன கீறல் விழுந்தாலும்கூட பிரச்னை பெரிதாகும். அப்படி ஒரு பிரச்னையை சொல்கிற படம். படிக்காமல், பள்ளிக்கு சரியாக வராமல் இருக்கும் மாணவர்களை ஆசிரியையை சுகன்யா திருத்த முயற்சிக்கிறார். அது பிடிக்காத மாணவர்கள் அவரை மாடியிலிருந்து கீழே தள்ளிவிடுகிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. முழு படமும் நாகர்கோவில் பகுதியில் படமாக்ககப்பட்டுள்ளது" என்கிறார் இயக்குனர் ஜி.ஜீ.அசோகன்.