ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சரத்குமார் கடைசியாக சோலோ ஹீரோவாக நடித்த படம் ஜக்குபாய். அதன் பிறகு காஞ்சனா, சென்னையில் ஒருநாள், நிமிர்ந்து நில், கொல கொலையா முந்திரிக்கா படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தார். மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் முக்கிய கேரக்டர்களில் நடித்தார். தற்போது 4 வருட இடைவெளிக்கு பிறகு சரத்குமார் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் சண்டமாருதம். சரத்குமாருடன் இணைந்து அவர் மனைவி ராதிகாக சரத்குமார் மேஜிக் பிரேம்ஸ் லிஸ்பன் ஸ்டீபன் ஆகியோர் இதனை தயாரிக்கிறார்கள்.
இந்தப் படத்தின் கதையை சரத்குமார் எழுதியுள்ளார். திரைக்கதை வசனத்தை ராஜேஷ்குமார் எழுதியுள்ளார். ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். ராதிகா சரத்குமார், சமுத்திரகனி, கன்னட நடிகர் அருண்சாகர் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. ஜேம்ஸ் வசந்தன் இசை அமைக்கிறார். என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
"புயல், சூறாவளியை தாண்டி அசுரவேகத்தில் வீசும் காற்றை சண்டமாருதம் என்று குறிப்பிடுவார்கள். படத்தில் சரத்குமாருக்கு அப்படி ஒரு கேரக்டர். வில்லன் கேரக்டரும் படு பயங்கரமாக இருக்கும். பக்கா ஆக்ஷன் படம்தான். ஆனால் இதுவரை யாரும் சொல்லப்படாத கதை களத்தில் சொல்லப்படாத கதையை சொல்லப்போகிறோம். "எதிரியை பார்த்து பழக்கமில்லை எரிச்சுதான் பழக்கம்" என்பது வில்லன் சரத்குமாரின் பாலிசி. "எதிரியை எரிப்பது மட்டுமல்ல சாம்பாலாக்கித்தான் பழக்கம்" என்பது ஹீரோ சரத்குமாரின் பாலிசி. இவர்கள் இருவரின் மோதல்தான் சண்டமாருதம். என்கிறார் இயக்குனர் ஏ.வெங்கடேஷ்
இதன் படப்பிடிப்பு இன்று (மே 14) காலை மயிலாப்பூரில் உள்ள அப்பர்சாமி கோவிலில் பூஜையுடன் தொடங்கியது. இதில் திரையுலக முன்னணியினர், சமத்துவ மக்கள கட்சி பிரமுகர்கள், நடிகர் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக நடந்த சிறப்பு வழிபாட்டில் சரத்குமாரும், ராதிகாவும் கலந்து கொண்டு வழிபட்டனர்.