ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
மாஜி நடிகை ராதா தனது மகள்கள் கார்த்திகாவை கோ படத்தில் அறிமுகம் செய்தவர், இரண்டாவது மகள் துளசியை மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகம் செய்தார். இதில் துளசி நடித்த படம் தோல்வியடைந்ததால், அடுத்தபடியாக அவருக்கு எதிர்பார்த்தபடி படவாய்ப்பில்லை. அதனால் மீண்டும் மகளுடன் சொந்த ஊருக்கே கிளம்பி விட்ட ராதாவை பின்னர் யான் படத்தில் ஜீவாவுடன் நடிப்பதற்காக அப்பட டைரக்டர் ரவி.கே.சந்திரன் தொடர்பு கொண்டதும், விழுந்தடித்து ஓடிவந்து அப்படத்தில் கமிட்டானார்.
அதோடு, அந்த படத்தில் துளசி ராணுவ அதிகாரியின் மகள் என்பதால், அவரது உடலைக்குறைக்கும் முயற்சிகள் எதுவும் இல்லை என்பதால், அதே உடல்கட்டோடு யான் படத்தில் நடித்தார் துளசி. ஆனால், ஆறு மாதத்தில் முடிய வேண்டிய படம் ஒரு வருடமாகி விட்டது. இருப்பினும், அந்த படத்தில் நடித்துக்கொண்டே படிப்பையும் தொடர்ந்து வந்தார் துளசி.
இந்த நிலையில், தற்போது யான் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முன்தினம் அப்படத்தின் ஆடியோ விழா சென்னையில் நடந்தது. முன்னதாக, இந்த விழாவில கலந்து கொள்ள துளசியை யாரும் அழைக்கவில்லையாம். ஆனால், ஆடியோ வெளியிடுகிற சேதியறிந்த ராதா, உடனடியாக அப்பட தயாரிப்பாளரான எல்ரெட் குமாரை தொடர்பு கொண்டு, துளசியை எதற்காக அழைக்கவில்லை? என்று கேட்டாராம்.
அதற்கு, அவருக்கு பரீட்சை நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் சினிமா விழாவுக்கு அழைத்தால் படிப்பு கெட்டுப்போகுமே என்பதால்தான் அழைக்கவில்லை என்றாராம். அதைக்கேட்ட ராதாவோ, என்னைப் பொறுத்தவரை சினிமாவுக்குத்தான் முதலிடம் கொடுப்பேன். தொழிலை நாம் மதிக்க வேண்டும் அப்போது தான் தொழில் நம்மை மதிக்கும். அதனால், நான் துளசியுடன் கண்டிப்பாக ஆடியோ விழாவில் கலந்து கொள்வேன் என்று கூறி சென்னைக்கு வந்து யான் படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டார்.
அதையடுத்து நேற்று நடந்த அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பிலும் கலந்து கொண்டார் துளசி.