ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்த தமிழ் ரசிகர்களை புரிஞ்சுக்கவே முடியாது. நல்ல அழகான நடிகைகளை ஐஸ்ட் லைக் தட் என்று கடந்து போவார்கள். சுமாரன நடிகையைகூட தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். அப்படித்தான் ஆனது இஷா தல்வார் கதையும்.
மலையாளத்தில் வெளிவந்த தட்டயன்மரத்து படத்துக்கு பிறகு மலையாள ரசிகர்களின் கனவு கன்னியாக ஆனார். பொதுவாக மலையாள ரசிகர்கள் நடிகைகளுக்கு அவ்வளவு முக்கியத்தும் தரமாட்டார்கள் அப்படி இருந்தும் இஷா அவர்களின் மனதை கவர்ந்தார். அதேபோல தமிழ் ரசிகர்களையும் கவரலாம் என்று எதிர்பார்த்த இஷாவை தில்லு முல்லு படத்திற்கு பிறகு ஆளை காணவில்லை. இத்தனைக்கு அந்தப் படம் ஹிட். ஆனாலும் தொடர்ந்து மலையாளத்தில் பிசியாக இருக்கிறார். உத்சகா கமிட்டி, பெங்களூர் டேஸ், காட் பிளஸ் பூ படங்களில் நடித்து வருகிறார்.
"காட் பிளஸ் யூவில் கார்பரேட் கம்பெனிகளின் பேக்ரவுண்டில் நடக்கிற முக்கோண காதல் கதை. எனக்கு வலுவான கேரக்டர். ரசிச்சு பண்ணியிருக்கேன். தில்லு முல்லுக்கு பிறகு தமிழில் சில வாய்ப்புகள் வந்தது. அது எனக்கு திருப்தியாக இல்லை. சும்மா ஹீரோவை -சுற்றி சுற்றி வருகிற கேரக்டர். நடிப்பதற்கு அதில் ஒன்றும் இல்லை. அதனால் மலையாளத்தின் பக்கம் வந்துவிட்டேன். நல்ல கதை அமைந்தால் மீண்டும் தமிழில் நடிப்பேன்" என்கிறார் இஷா.