Advertisement

சிறப்புச்செய்திகள்

அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எனது கதையை திருடி படம் எடுத்தார்: டி.பி.கஜேந்திரன் மீது பாக்யராஜ் நேரடி தாக்கு

09 மே, 2014 - 17:47 IST
எழுத்தின் அளவு:

கோடி ராமகிருஷ்ணா தெலுங்கில் இயக்கி உள்ள அவதாரம் என்ற படம், மீண்டும் அம்மன் என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீசாக இருக்கிறது. இதன் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இயக்குனர் கே.பாக்யராஜ் பாடல்களை வெளியிட்டார்.


விழாவில் இயக்குனர் டி.பி.கஜேந்திரன் பேசும்போது: "நானெல்லாம் அந்தக் காலத்தில் குத்து மதிப்பா படம் எடுத்தபோது நிறைய படம் இயக்குறதுக்கு சான்ஸ் கிடைச்சுது. இப்போ நிறைய படங்கள் பார்த்து, நிறைய படித்து படம் இயக்க தெளிவா இருக்கிறப்போ பட வாய்ப்பே இல்லை. நடிக்க வைக்கிறதுக்கு ஆண் வாரிசும் இல்லை. அதனால கிடைக்கிற கேரக்டர்ல நடிக்கிறேன். சூட்டிங்ல தர்ற இட்லி பொங்கல் வடைய சாப்பிடலேன்னா தூக்கம் வரமாட்டேங்குது" என்றார்.


பின்னர் கே.பாக்யராஜ் பேசியதாவது: "டி.பி.கஜேந்திரன் இப்போ ஃப்ரீயா இருக்கேன். நிறைய படம் பார்க்குறேன் சான்ஸ் வரலேன்னு சொன்னார். இந்த நேரத்துல எனக்கு ஒரு விஷயம் ஞாபகம் வருது. சில வருஷங்களுக்கு முன்னாடி ஒரு தெலுங்கு படத்துல நடிச்சிக்கிட்டிருந்தேன்.


அப்போது ஒரு தெலுங்கு புரட்யூசர் என்னை பார்க்க வந்திருந்தார். நான் தமிழ்ல ரிலீசான ஒரு படத்தை தெலுங்குல எடுக்கப்போறேன். அதுல நீங்க நடிக்கணும்னு சொல்லி அந்த படத்தோட சிடியை என்கிட்ட கொடுத்துட்டு போனார். அதுல இயக்கம் டி.பி.கஜேந்திரன்னு போட்டிருந்துச்சு. இந்த படத்தை நாம எப்படி பார்க்காம மிஸ் பண்ணினோம்னு வீட்டுல போயி படத்தை போட்டு பார்த்தேன். படம் போக போகத்தான் தெரிஞ்சுது. அது என்னோட கதை. ஒரு டி.வி.தொடருக்காக நான் எழுதியிருந்த கதை. அதை யாரோ ஒருத்தர் திருடிக் கொண்டுபோய் டி.பி.கஜேந்திரன்கிட்ட கொடுதிருக்கான். கஜேந்திரனை குறை சொல்வதற்காக இதை சொல்லவில்லை. எச்சரிக்கையா இருக்கணுங்குறதுக்காக சொல்றேன். இனிமே யாராவது கதையோடு வந்தால் ஏம்ப்பா இது உன்னோட கதையா இல்ல வேற யாராவது எழுதினதான்னு கேட்டுக்குங்க" என்றார்.


இந்த தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத டி.பி.கஜேந்திரன் அமைதியாக உட்கார்ந்திருந்தார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in