பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
கோலிசோடா படத்தை இயக்கியவர் விஜய்மில்டன். கேமராமேனான இவர் அதையடுத்து, சுசீந்திரன் இயக்கி வரும் ஜீவா படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். ஆனால் ஒரு பத்து நாட்கள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, அவர்களுக்கிடையே தொழில்ரீதியாக சில வாக்குவாதங்கள் ஏற்பட்டிருக்கிறது.
அதுவும் கோலிசோடா என்ற மெகா ஹிட் படத்தை இயக்கியவர் விஜய்மில்டன் என்பதால், தனது சார்பில் காட்சிகள் வைப்பது குறித்து சில யோசனைகள் அவர் சொன்னபோது அதற்கு சுசீந்திரன் உடன்படவில்லையாம். அதனால்தான், 10 நாட்களிலேயே அந்த படத்திலிருநது வெளியேறியிருக்கிறார் விஜய்மில்டன்.
அதன்காரணமாக, ஏற்கனவே தான் இயக்கிய, நான் மகான் அல்ல, ராஜபாட்டை படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த மதியை அழைத்திருக்கிறார் சுசீந்திரன். அந்த நேரத்தில் அவர் இரண்டு தெலுங்கு படங்களுக்கு பிசியாக ஒளிப்பதிவு செய்து வந்திருக்கிறார். இருப்பினும், சுசீந்திரன் தனது நண்பர் என்பதால், தனது வேலைப்பளுவுக்கு இடையிலேயும் ஜீவா படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் மதி. இவர் விஜய்மில்டனிடத்தில் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.