ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மம்மூட்டி. இவர் தமிழிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். அதனால், மலையாளத்தில் சில படங்களில நடித்துள்ள தனது மகன் துல்கர்சல்மானையும் தமிழ், மலையாளம் என இரண்டு மொழி நடிகராக வளர்க்க ஆசைப்பட்ட மம்மூட்டி, பாலாஜி சக்திவேல் இயக்கிய வாய் மூடி பேசவும் என்ற இரு மொழி படத்தில் நடிக்க வைத்தார்.
ஆனால், எதிர்பார்க்கப்பட்ட அந்த படம் தியேட்டர்களில் காத்து வாங்கியது. சில முக்கியமான தியேட்டர்களில இருந்து படத்தை தூக்கினார்கள். இதனால், மகன் நடித்த முதல் படமே தமிழில் ஓடவில்லை என்றால், ராசியில்லாத நடிகர் என்று ஓரங்கட்டி விடுவார்களே என்ற அதிர்ச்சியடைந்த மம்மூட்டி, சென்னையில் தனக்கு வேண்டப்பட்ட சில தியேட்டர் அதிபர்களை சந்தித்து படத்தை உடனே எடுத்து விட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டாராம்.
அதோடு, சரியான கலெக்சன் இல்லையென்றால் அதற்கான நஷ்டத்தை நான் கொடுத்து விடுகிறேன் என்று கூறினாராம். அதையடுத்து, இப்போது சில தியேட்டர்களில் கூட்டமே இல்லையென்றாலும், வாய் மூடி பேசவும் படத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.