பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு நடித்த தெனாலிராமன் படம் சமீபத்தில் வெளியானது. இதனை யுவராஜ் தயாளன் இயக்கி இருந்தார். படம் சரியான வரவேற்பை பெறவில்லை. என்றாலும் வடிவேலுவும், யுவராஜ் தயாளனும் அடுத்த படத்தில் இணைகிறார்கள். வடிவேலுக்கான அடுத்த படத்தின் பணிகளை துவக்கிவிட்டர் யுவராஜ்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: தெனாலிராமன் போன்று சரித்திரகால படம் அல்ல, ஆனால் பேண்டஸியான படம்தான். 18ம் நூற்றாண்டில் துவங்கி 2015ல் முடிகிற மாதிரியான ஒரு புதுமையான கதை. தெனாலிராமனுக்கு முன்பே உருவான கதை கரு இது. இதை வடிவேலுவிடம் சொன்னபோது தெனாலிராமனுக்கு பிறகு இதை பண்ணலாமுன்னு சொன்னார். இப்போது அதற்கான வேலையை துவங்கிவிட்டேன். ஸ்கிரிப்ட் பணிகள் நடந்து வருகிறது. ஜூலையில் படப்பிடிப்பை தொடங்குகிறோம்" என்றார்.
தெனாலிராமன் படத்துக்கு பிறகு வடிவேலு சிம்புதேவன் இயக்கதில் இம்சை அரசன் 22ம் புலிகேசியின் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பினார். ஆனால் சிம்புதேவன் அடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதால் இந்த படத்தை துவக்கச் சொல்லிவிட்டார். பிரபுதேவா இயக்கும் படமும் தள்ளிப்போவதால் இடைப்பட்ட காலத்தில் இந்தப் படத்தை முடித்துவிட வடிவேலு திட்டமிட்டிருப்பதாக சொல்கிறார்கள்.