ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தீனா என்ற படத்தை அஜீத்தை வைத்து இயக்கி அறிமுகமானவர். ஏ.ஆர்.முருகதாஸ். அதையடுத்து, விஜயகாந்தை வைத்து ரமணா, சூர்யாவை வைத்து கஜினி போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர். ஆனால், இதுவரை அவர் இயக்கிய அனைத்து படங்களுமே நகரம் சார்ந்த கதைகளாகவே இருந்துள்ளன.
எதனால் தனக்கு கிராமத்து கதைகளை இயக்குவதில் ஆர்வம் ஏற்படவில்லை என்பதை அவர் கூறுகையில், மண்சார்ந்த கதைகளை இயக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருந்தது. ஆனால், அதற்கான முயற்சிகளில் ஈடுபட நினைக்கும்போது, பாரதிராஜா சார்தான் கிராமம் சார்ந்த எல்லாவிதமான கதைகளை படமாக்கி விட்டாரே. அப்படி நாம் ஒரு கதையை ரெடி பண்ணி எடுத்தாலும், அவர் மாதிரியெல்லாம் எடுக்க முடியாது என்று நினைத்து அந்த முயற்சியை கைவிட்டு விடுவேன்.
ஆனால், இப்போது என்னிடம் உதவியாளராக இருந்த ஆனந்த் அப்புச்சி கிராமம் என்றொரு படத்தை இயக்கியிருக்கிறார். பக்கா கிராமத்து கதையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்களும், டிரைலரும் ஆச்சர்யத்தை தூண்டுவதாக உள்ளது. நான் இயக்க பயந்த கிராமத்து கதையை என் உதவியாளர் இயக்கியிருப்பது சந்தோசமாக உள்ளது. நிஜமாலுமே என்னைவிட அவருக்கு தைரியம் அதிகம்தான் என்றார் முருகதாஸ்.