ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிம்பு, நயன்தாரா நடிக்கும் இது நம்ம ஆளு படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். குறளரசன் இசை அமைக்கிறார். டி.ராஜேந்தரும், பாண்டிராஜும் இணைந்து தயாரிக்கிறார்கள். சில பிரச்னைகள் காரணமாக இந்தப் படம் பாதியிலேயே நின்று விட்டதாக தகவல்கள் வெளியானது. இதனை டி.ராஜேந்தர் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சிலம்பரசன் நடித்துக் கொண்டிருக்கும் வாலு படத்தை முதலில் முடித்துக் கொடுக்க வேண்டியது இருக்கிறது. அதனால் இப்போது அந்தப் படத்தில் தன் முழு கவனத்தையும் சிம்பு செலுத்தி வருகிறார். வாலு படத்திற்கு இரண்டு பாடல் காட்சிகள் படமாக்கப்பட வேண்டியது இருந்தது. அதில் ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டு விட்டது. இன்னும் ஒரு பாடல் காட்சியையும் படமாக்கிவிட்டால் அந்தப் படத்தின் பணிகள் முடிந்து விடும்.
வாலு பணிகள் முடிந்ததும் சிம்பு, இது நம்ம ஆளு படத்தில் நடிப்பார். ஏற்கெனவே 60 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. மீதமுள்ள காட்சிகள் விரைவில் படமாக்கப்படும். படம் குறித்து வெளிவரும் எந்த செய்தியிலும் உண்மையில்லை. இப்போது நான் சொல்லியிருப்பதுதான் உண்மை. என்கிறார் டி.ஆர்.