ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சின்னத்திரை நடிகர் ரவிராகுல். தொலைக்காட்சியில் சீரியல்கள் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து நடித்து வருகிறவர். தற்போது நாதஸ்வரம் சீரியலில் நடித்து வருகிறார். ரவிராகுல் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பு ஆத்தா உன் கோவிலிலே, மிட்டா மிராசு, மாங்கல்யம் தந்துனானேனா, பொல்லாங்கு, தமிழ்பொண்ணு உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
இப்போது ரவிராகுல், அடுத்த கட்டத்துக்கு சென்று விட்டார். தனது பெயரை கே.ர.ராகுல் என்று மாற்றிக் கொண்டு சினிமா இயக்குனராகிவிட்டார். தற்போது கலர் கண்ணாடிகள் என்ற படத்தை இயக்கி வருகிறார். தமிழ்நாட்டில் இருந்து மலேசியாவுக்கு பார்களில் பாடச் செல்லும் அப்பாவி பாடகர்கள் அங்கு படும் கஷ்டத்தை சொல்லுகிற படம். அஸ்வின், திவ்யாஸ்ரீ என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.
"சினிமாவில் நடிகனாக அறிமுகமாகி, சின்னத்திரை நடிகனாகி மீண்டும் சினிமாவுக்கு இயக்குனராக திரும்பி இருக்கிறேன். ஆனாலும் சின்னத்திரையில் எனது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கும்" என்கிறார் ராகுல். (அருகில் உள்ள படம்: கலர் கண்ணாடிகள் படப்பிடிப்பில் ஹீரோ ஹீரோயினுடன் ராகுல்).