ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
61வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டன. இதில் தமிழில் வெளியான தங்கமீன்கள் படத்திற்கு சிறந்த படம், சிறந்த பாடலாசிரியர், சிறந்த குழந்தை நட்சத்திரம் ஆகிய 3 தேசிய விருதுக்கும், மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் தலைமுறைகள் படத்திற்கு, தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் நர்கீஸ் விருதுக்கும் தேர்வானது. இதேப்போல் வல்லினம் படத்திற்கு சிறந்த படத்தொகுப்புக்கான விருதுக்கு தேர்வானது. நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். இதில் தமிழ் கலைஞர்களான ராம், நா.முத்துக்குமார், தங்கமீன்கள் சாதனா, வல்லினம் படத்தொகுப்பாளர் ஜோசப் மற்றும் தலைமுறைகள் படத்துக்காக சசிகுமார் ஆகியோர் ஜனாதிபதி கையால் தேசிய விருதை பெற்றனர்.
இந்நிலையில் தேசிய விருது பெற்ற கையோடு தங்கமீன்கள் படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இதில் இயக்குநர் ராம், ஜே.எஸ்.கே. பிலிம் கார்பரேஷன் சதீஷ் குமார், இயக்குநர் ராம், சிறுமி சாதனா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ராம், தங்கமீன்கள் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது சந்தோஷம். இதேப்போல் சசிகுமாரின் தலைமுறைகள் படத்திற்கும் விருது கிடைத்துள்ளது. நானும், சசிகுமாரும் எங்களது குருநாதர் பாலுமகேந்திராவின் பட்டறையில் இருந்து வந்தவர்கள். எங்கள் இருவருக்குமே விருது கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விருதை என் குருநாதர் பாலுமகேந்திராவுக்கு சமர்ப்பிக்கிறேன் என்றார்.
நா.முத்துக்குமார் பேசுகையில், இந்த விருதை என் அப்பா மற்றும் மகனுக்கு சமர்ப்பிக்கிறேன். அதேப்போல் மறைந்த பாலுமகேந்திரா அவர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன் என்றார்.
சிறுமி சாதனா பேசுகையில், இந்த வயதில் எனக்கு தேசிய விருது கிடைத்தது மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கிறது. இதற்காக முதலில் இயக்குநர் ராம் அவர்களுக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன். ஏனென்றால் அவர் தான் என்னை இப்படத்தில் நடிக்க வைத்தார் என்றார்.
தயாரிப்பாளர் சதீஷ் பேசுகையில், என் படத்திற்கு கிடைத்தது பெருமையாக உள்ளது. இந்த விருது, மேலும் நல்ல நல்ல படங்களை எடுக்க எனக்கு ஒரு உந்துதலாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.