ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிந்துசமவெளி புகழ் இயக்குநர் சாமி தற்போது கங்காரு என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பை கொடைக்கானலில் செட் போட்டு படமாக்கி இருக்கிறார். செட் என்றதும் பிரம்மாண்டமாக கற்பனை செய்துவிட வேண்டாம். ஒரு வீடு செட்தான். இந்த செட்டில் சுமார் 20 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார் சாமி. அதன் பிறகு கொடைக்கானலில் வேறு பல இடங்களில் சில நாட்கள் படப்பிடிப்பை நடத்தினாராம். ஆனால் கொடைக்கானலில் பிரம்மாண்டமான செட் போட்டு பல நாட்கள் அங்கே படப்பிடிப்பு நடத்தியதாக மீடியாக்களிடம் பில்ட் அப் செய்து வருகிறார். இதற்கிடையில் கொடைக்கானலில் போடப்பட்ட செட்டை சாமி இன்னும் பிரிக்காமல் அப்படியே விட்டுவிட்டு வந்துவிட்டார். பேட்ச் வொர்க் ஏதாவது இருந்தால் அந்த செட் மறுபடி தேவைப்படும் என்பதால்தான் செட்டை பிரிக்காமல் வைத்திருப்பதாக சாமி தரப்பு சொல்லி வருகிறது. லொகேஷனுக்கான பணத்தை செட்டில் பண்ணாததினால் இடத்தின் உரிமையாளர் செட்டை பிரிக்க அனுமதிக்கவில்லை என்றும் ஒரு தகவல் அடிபடுகிறது.
எது உண்மை?