ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்நாட்டில் நடிகைகள் பஞ்சம் தலைவிரித்தாடுவதால்தான் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலத்து நடிகைகள் எதிர்பார்த்திருக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது தமிழ் சினிமா. அந்த வகையில், அப்புச்சி கிராமம் என்ற படத்தில் கேரள அழகி சுவாசிகா, ஆந்திர அழகி சுஜா, கர்நாடக அழகி அனுஷா ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்களில் சுவாசிகா, வைகை, கோரிப்பாளையம், சாட்டை உள்பட பல படங்களில் நடித்தவர். இப்படம் 8 விதமான காலகட்ட சூழலில் உருவாகியிருப்பதால். இதில் சுவாசிகாவும் ஒரு சூழலில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறராம். அதேப்போல் சுஜா, ஒரு அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார். கிராமத்து சூழலில் உருவாகும் ஒரு நாட்டுப்புற பாடலில் பக்கா கிராமத்து பெண்ணாட்டம் உருக்கமாக நடித்திருக்கிறாராம். அதனால் இந்த படத்துக்குப்பிறகு தனக்கு தமிழில் ஒரு நல்ல அடையாளம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்.
இவர்களைத் தொடர்ந்து நடித்துள்ள அனுஷாதான் இந்த படத்தின் பிரதான நாயகி. கர்நாடகத்தில் இருந்து வந்துள்ள இவர், எந்த மாதிரியான கிளாமர் காண்பித்து நடிப்பதற்கும் டபுள் ஓகேதானாம். ஆனால், இது கிராமத்து கதை என்பதால், அவரையும் அப்புச்சி கிராமவாசியாகவே பக்காவாக மாற்றி நடிக்கவைத்துள்ளனர். ஆக, இந்த மூன்று அண்டை மாநில அழகிகளும் தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்களாம்.