ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆந்திரா தமிழ் சினிமாவுக்கு தந்த அழகிகளில் சுஜாதா என்ற சுஜாவும் ஒருவர். 2002ல் ப்ளஸ்-2 என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் இவருக்கு அதையடுத்து தொடர்ந்து நாயகி வேடம் கிடைக்கவில்லை. அதனால் சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்த சுஜா, பின்னர் குத்துப்பாட்டு நடிகையாகவும் ரவுண்டு கட்டினார்.
தமிழில், மாயாவி, கஸ்தூரிமான், வர்ணஜாலம், காதல் செய்ய விரும்பு, லீ, சேட்டை என பல படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்துள்ள சுஜாவின் கையில் இப்போது தமிழில், அப்புச்சி கிராமம், அமளிதுமளி, காதல் தீவு, பென்சில் போன்ற படங்கள் உள்ளன. இதில் அப்புச்சி கிராமம் படத்தில் இதுவரை நடிக்காத ஒரு வித்தியாசமான கேரக்டரில் தான் நடித்திருப்பதாக சொல்கிறார் சுஜா.
அதுகுறித்து அவர் கூறுகையில், இந்த படத்தில் ஒரு புதிய காமெடியனுக்குத்தான் நான் ஜோடியாக நடித்திருக்கிறேன். ஆனால், எனக்கு இரண்டு பாடல்கள் உள்ளது. அதில் ஒரு பாடலை கேட்டதும் நான் அழுது விட்டேன். இதுவரை எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால், அந்த படங்களின் பாடல் என்னை அந்த அளவுக்கு கண்கலங்க வைத்ததில்லை. இந்த படத்தில் நான் நடித்த பாடல் முதல் தடவையாக என்னை அழ வைத்திருக்கிறது. இதை படம் பார்க்கும்போது ரசிகர்களும் பீல் பண்ணுவார்கள் என்கிறார் சுஜா.