ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் காளி. பீட்சா 2, உதயம் என்.எச் 4, விழா, தெகிடி, கேரள நாட்டிளம் பெண்களுடனே, வாயை மூடி பேசவும் படங்களில் முக்கிய காமெடி வேடமேற்று கவனம் ஈர்த்தவர். தற்போது முண்டாசுப்பட்டி, பூவரசம் பீபீ, கதை சொல்லப்போறோம், உறுமீன் படங்களில் சோலோ காமெடியனாக நடிக்கிறார். சூரியின் கால்ஷீட் கிடைக்காதவர்கள் காளியை தேடி ஓடுகிறார்கள். சூரிக்கு போட்டியாக இவரைக் கொண்டுவர சிலர் தீவிரமாக வேலை செய்வதாக சொல்கிறார்கள். ஆனால் காளி "நான் யாருக்கும் போட்டியில்லண்ணே..." என்று வெள்ளிந்திரியாக சொல்கிறார். அவர் அளித்த முதல் பேட்டி....
கோவில்பட்டி பக்கம் குவளையத்தேவன் பட்டிதாண்ணே சொந்த ஊரு. சின்ன வயசுல பள்ளிக்கூடத்துல, கோவில் திருவிழாவுல நாடகத்துல நடிச்சேன். நடிப்புன்னா உசுரு. சினிமால நடிக்கப்போன்னு பிரண்டுங்க ரெயிலேற்றி விட்டாங்க. சென்னைக்கு வந்தா தலையும் புரியல காலும் புரியல. வயித்துப்பாட்டுக்கு கிடைச்ச வேலை செஞ்சேன். பார்க்காத வேலை இல்லேண்ணே வேலை நேரம் போக மீதி நேரத்துல கோடம்பாக்கம் கம்பெனிகள்ல ஏறி இறங்கினேன்.
8 வருஷம் அலைஞ்ச பிறகு டைரக்டர் விஜயபிரபாகரன் சார் கண்ணுல பட்டேன். தசையினை தீச்சுடினும் படத்துல சின்ன ரோல் கொடுத்தார். அந்தப் படம் இன்னும் ரிலீசாகல. அப்புறம் குறும்படங்கள் பக்கம் போனேன். ஓர்குரல், முண்டாசுப்பட்டி, சைனா டீ, ரவடி கோபாலும் நான்கு திருடர்களும்னு ஏகப்பட்ட குறும்படங்கள்ல நடிச்சேன். நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சியில சிறந்த குறும்பட நடிகராக செலக்ட் ஆனேன். அதுக்கு பிறகுதான் சினிமாவோட கருணை பார்வை என்மேல விழுந்துச்சு. இன்னிக்கு நானும் நாலு காசு சம்பாதிச்சு நல்ல சாப்பாடு சாப்புடுறேன். அந்த கடவுளுக்கும், பெத்த ஆத்தா அப்பனுக்கும், சினிமாவுக்கும்தாண்ணே காலத்துக்கும் நன்றியோட இருப்பேன். என்கிறார் காளி.