ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பரபரப்புக்கு பெயர் பெற்ற கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. அதிக பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் அவ்வப்போது பரபரப்புகளை உண்டாக்கி கேரியரை லைம் லைட்டில் வைத்திருப்பவர். அடிக்கடி நிர்வாண போஸ் கொடுத்து அதிர வைப்பார். 2011ம் ஆண்டு இந்திய அணியை உலக கோப்பையை கைப்பற்றினால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று அறிவித்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 2) பரபரப்பு மிக்க மும்பை சாலை ஒன்றில் ஒரு பெண் ஆபாச உடை அணிந்து போதையில் தள்ளாடிக் கொண்டிருப்பதற்காக போலீசுக்கு தகவல் வந்தது. உடனே விரைந்து வந்த போலீசார் அவரை உற்றுக் கவனித்தபோதுதான் அது நடிகை பூனம் பாண்டே என்று கண்டுபிடித்தனர். அவரை வீட்டுக்கு போகச் சொல்லியிருக்கிறார்கள். நான் என் பாய்பிரண்டுக்காக காத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதற்காக அரை மணி நேரம் காத்திருந்த போலீசார். மீண்டும் அவரை வீட்டுக்கு போகும்படி கூறியிருக்கிறார். அதை மறுத்து அவர் போலீசுடன் ஆபாசமாக பேசி தகராறு செய்யவே அவரை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். போதையில் பொதுமக்களுக்கு இடையூறாக நடந்து கொண்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
"என்மீது போலீஸ் பொய் வழக்கு பதிந்து துள்ளது. நண்பருக்காக காத்திருப்பது இந்த நாட்டில் தப்பா?" என்று தனது டுவிட்டரில் கேட்டிருக்கிறார் பூனம்.