ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
இயக்குனர் பாரதிராஜா கல்லுக்குள் ஈரம் படத்தில் நடித்தார். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு ரெட்டைச்சுழி என்ற படத்தில் கே.பாலச்சந்தருடன் இணைந்து நடித்தார். சமீபத்தில் வெளியான பாண்டியநாடு படத்தில் விஷாலுக்கு தந்தையாக நடித்தார். இப்போது டைரக்ஷனை விட்டுவிட்டு முழுநேர தொழில்முறை நடிகராகிவிட்டார். அவரது வழியில் அவரது தம்பி ஜெயராஜும் நடிகராகி விட்டார். பாரதிராஜா படங்களின் தயாரிப்பு நிர்வாக பணிகளையும், அலுவலக பணிகளையும் செய்து கொண்டிருந்த ஜெயராஜ் கத்துக்குட்டி என்ற படத்தில் நரேனுக்கு தந்தையாக நடிக்கிறார்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் இரா.சரவணன் கூறியதாவது: யாரிடமும் உதவியாளராக இல்லாமல் நேரடியாக படம் இயக்குகிறேன். இயக்குனர்கள் அமீர், சசிகுமார் நண்பர்கள். தஞ்சாவூர் பக்கம் கிராமத்து இளைஞர்கள் நல்லா படிச்சா பெங்களூரு, மும்பைன்னு போயிடுவாங்க. குறைவா படிச்சா திருப்பூர், பொள்ளாச்சின்னு போயிடுவாங்க. படிக்காத பசங்கதான் ஊருக்குள்ள வம்புதும்பு பண்ணிக்கிட்டு திரிவாங்க. அப்படி ஒருத்தன்தான் படத்துல ஹீரோ. சும்பா வம்பு பண்ணிக்கிட்டு திரிஞ்சவனுக்கு ஒரு பெரிய பொறுப்பு வருது. அப்பாவின் 50 வருஷ கனவை நிறைவேற்றணும். அதை அவன் எப்படி செய்றான்ங்றதுதான் கதை.
அப்பா கேரக்டர் பவர்புல்லா இருக்கணும். பாரதிராஜா சார் ஆபீசுக்கு போகும்போதெல்லாம் அவர் தம்பி ஜெயராஜ் சாரை பார்ப்பேன். அண்ணனுக்கு நேரெதிர் கேரக்டர். அதிர்ந்துகூட பேச மாட்டார். அவர்தான் அப்பான்னு முடிவு பண்ணினேன். முதல்ல அவர் நடிக்க சம்மதிக்கல. அப்புறம் பாரதிராஜா சாரிடம் கதை சொல்லி அவர் ரெக்கெமண்ட் பண்ணின பிறகுதான் நடிக்க ஒப்புக்கொண்டார் என்கிறார்.